Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி 1ம் தேதி.. 8வது ஊதியக்குழு தொடங்குகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன? சம்பளம் உயருகிறதா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியோடு 7வது ஊதியக்குழு முடிவிவிற்கு வருகிறது. இதனால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1 தொடங்க வேண்டும். ஆனால் உண்மையில் ஊதியக்குழு தொடங்க இன்னும் 1-2 வருடங்கள் ஆகும்.

இதனால் அதுவரை 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும். 8வது ஊதியக்குழுவின் கீழ் யார் தகுதியானவர்கள், யார் இல்லை, திருத்தப்பட்ட ஊதியம் எப்போது வரும், எதிர்பார்க்கப்படும் உயர்வு எவ்வளவு என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

narendra modi dearness allowance

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக் குழு சம்பளம் வழங்க போகிறது எனினும், யார் பலன் பெறுவார்கள், எவ்வளவு உயர்வு, சம்பள மாற்றங்கள் எப்போது போன்ற பல குழப்பங்கள் இன்னும் நிலவுகின்றன. இக்கட்டுரை அந்த சந்தேகங்களைத் தீர்க்கும்.

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவின் கீழ் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மத்திய சிவில் சேவைகளின் ஊதியக் கட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என இரு தரப்பினருமே இக்குழுவின் வரம்பிற்குள் வருகின்றனர்.

மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சட்டமுறை நிறுவன ஊழியர்கள் தானாகவே இக்குழுவின் கீழ் வரமாட்டார்கள். சம்பந்தப்பட்ட மாநில மற்றும் நிர்வாக அமைப்புகள், இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடிவு செய்தால் மட்டுமே பலன் பெறுவர்.

18 மாதங்களுக்குள் அறிக்கை

8வது ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு விட்டது அரசு அதற்கு 18 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் அளித்தது. நாடாளுமன்றத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு, பரிந்துரைகள் ஏற்கப்பட்டதும் போதுமான நிதி ஒதுக்கீட்டையும் நிதி அமைச்சகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசு இதுவரை இடைக்கால நிவாரணம் அல்லது அகவிலைப்படி/அகவிலை நிவாரணத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊதியம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முந்தைய ஊதியக் குழுக்களின் வரலாறு கால தாமதத்தைக் காட்டுகிறது. பரிந்துரைகள், அமைச்சரவை ஒப்புதல் பெற்று, பல மாதங்களுக்குப் பிறகே நிலுவைத் தொகையுடன் சம்பளம் வங்கிக் கணக்குகளுக்கு வரும்.

திருத்தப்பட்ட ஊதியம் ஜனவரி 1, 2026

யதார்த்தமாக, ஊழியர்களுக்கு உயர் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 2026-27 நிதியாண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இது அமலுக்கு வரும் தேதியிலிருந்து நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.

சம்பள உயர்வுக்கான அதிகாரப்பூர்வ எண் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தரம், படிகள் மற்றும் இறுதி ஃபிட்மென்ட் காரணிகளைப் பொறுத்து 20-35% உயர்வைக் காட்டுகின்றன. உதாரணமாக, 6வது ஊதியக் குழு சராசரியாக 40% உயர்வையும், 7வது ஊதியக் குழு 23-25% தாக்கத்தையும் அளித்தன.

8வது ஊதியக் குழுவுக்கு, ஃபிட்மென்ட் காரணி 2.4 முதல் 3.0 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பணவீக்கம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் பரந்த பொருளாதார நிலைமைகளைப் பொறுத்தது. இந்த மதிப்பீடுகள் வெறும் சாத்தியக்கூறுகளே, உறுதி செய்யப்பட்டவை அல்ல.

ஃபிட்மென்ட் காரணி 2.4 முதல் 3.0

ஊழியர்கள் இப்போதைக்கு பொறுமையாக இருப்பதுதான் புத்திசாலித்தனம். இக்குழு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வைத்து செயல்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சரவை ஒப்புதல்கள் மற்றும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் முக்கிய முடிவுகள் வெளிவரும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. ஆனால், உடனடி பலன்களுக்குக் ஊழியர்கள் இன்னும் சில மாதம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+