21 நிமிடங்களில் மொத்தமும் காலி.. எங்கெங்கு, எத்தனை மணிக்கு, எப்படி தாக்குதல் நடந்தது? முழு விவரம்
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தின என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் மொத்தம் 12 மிராஜ் போர் விமானங்கள், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடியாக நுழைந்தன.
முதல் தாக்குதல் பாலகோட் என்ற பகுதியில் அதிகாலை 3 மணி 45 நிமிடங்களுக்கு நடந்துள்ளது.
பாலகோட் தாக்குதல்
அங்குள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. நிம்மதியான தூக்கத்தில் இருந்த தீவிரவாதிகள் அப்படியே, நிரந்தரமான தூக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மிகப்பெரிய சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்றே நிமிடங்களில், அதாவது அதிகாலை 3 மணி 48 நிமிடங்களுக்கு முசாபர்பாத் என்ற பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அடுத்ததாக குண்டுகளை அள்ளி வீசியது இந்திய விமானப்படை விமானங்கள்.
10 நிமிடங்களில் 3வது தாக்குதல்
அடுத்த பத்தாவது நிமிடம், சக்கோதி என்ற பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை அள்ளித் தெளித்தது. இந்த தாக்குதல் நடைபெறும் போது மணி அதிகாலை 3மணி 58 நிமிடங்கள்.
21 நிமிடங்கள்
மொத்தம் 21 நிமிடங்களில் மூன்று முகாம்களையும் வெற்றிகரமாக தகர்த்து அழித்து விட்டு, இந்திய விமானப்படை விமானங்கள் மீண்டும் தாயகம் திரும்பின. மிக அதி விரைவாகவும், துல்லியமாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிகளின் முகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
லேசர் உதவியுடன் தாக்குதல்
மிக குறைந்த உயரத்தில் பறந்து சென்று தாக்குதல் நடந்துள்ளது. லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து குண்டு வீசப்பட்டுள்ளன. எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக பகல் நேரத்தை தவிர்த்துவிட்டு அதிகாலையில் அதிரடி அட்டாக் நடத்தப்பட்டுள்ளது.