Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) அமலுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதம் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

womens-reservation-parliament-seat-may-be-increased-from-543-to-816

இந்த திட்டங்களை 2029 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதன்பிறகு வரும் சட்டசபை தேர்தல்களில் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு தனது திட்டத்தை மாற்றி உள்ளது.

அதாவது இந்த 2 திட்டங்களை விரைவிலேயே கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

2 மசோதாக்களை கொண்டு வர திட்டம்

இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நாடாளுமன்ற சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கன இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக 2 முக்கிய மசோதாக்களை சட்ட திருத்தங்களுடன் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி தொகுதி மறுவரையறைக்கான ஒரு மசோதாவும், அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கான இன்னொரு மசோதவும் கொண்டு வரப்பட உள்ளது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களிடம் மத்திய அரசு ஆதரவு கேட்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோக்சபா தொகுதி 816 ஆக உயரும்

மேலும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரைறை காத்திருக்காமல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில், தொகுதி மறுவரையறை நடைமுறையில் இருந்து மகளிர் இடஒதுக்கீட்டை தனியாக பிரித்து முதற்கட்டமாக லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தற்போதைய லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்பது 816 ஆக உயரும்.இதனால் லோக்சபாவில் தனி மெஜாரிட்டிக்கு 409 எம்பிக்கள் தேவையாக இருக்கும்.

பெண்களுக்கு மட்டும் 273 தொகுதிகள்

இதில் 33 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கப்படும். இந்த தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இந்த தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் போட்டியிட முடியும்.

இதனால் லோக்சபா, சட்டசபைகளில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் ராஜ்யசபா மற்றும் ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.

3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை

இந்த 2 மசோதாக்களை நிறைவேற்ற லோக்சபா, ராஜ்யசபாவில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் ஆளும் பாஜக கூட்டணிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. இருப்பினும் மத்திய அரசு நடப்பு தொடரிலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளது.

ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஆதரவு கிடைக்காவிட்டால் சிறிது நாட்களுக்கு பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க குறுகிய கால நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+