வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி.. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடு! பிஎம் ஆவாஸ் யோஜனா மாஸ்
டெல்லி: ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்.. குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, கடந்த ஜூன் மாதத்துவக்கத்தில் ஆட்சி அமைத்த மோடி அரசின் 3வது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இதுவாகும். அந்தவகையில், இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்..

ஆய்வறிக்கை: எப்போதுமே ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது. இப்படிப்பட்ட சூழலில், கிராமப்புற மக்கள் பலன்பெறும் வகையில், அதிரடி அறிவிப்பினை நிதியமைச்சர் அறித்திருக்கிறார்.
அதன்படி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்த அறிவிப்பானது, கிராமப்புற மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஏழை மக்கள்: இதற்கு காரணம், கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுவற்காகவே துவங்கப்பட்டதுதான, மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டமாகும்... கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக உத்தரவாதம் தந்து, அதன்படியே இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக இந்த திட்டத்தின்கீழ் பிரிக்கப்பட்ட நிலையில், வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. குறிப்பாக எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு மானியம் பெருமளவு வழங்கப்படுகிறது.. அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு உரியதாகும்.
இந்த திட்டத்தில் கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடம் அவகாசம் உள்ளதுடன், வட்டி விகிதமும் மிகவும் குறைவு...
சிறப்பு அம்சங்கள்: வருமானம் மற்றும் நபரின் வகை அடிப்படையில் அரசாங்கம் இந்த மானியத்தை ஒதுக்குகிறது.. இந்த திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும் வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் வசதிகள் உள்ளன..
வீடுகளை வேகமாக வீட்டை கட்டி முடிப்பதுடன், உரித்த நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, நேரடி ஆய்வுகள், தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவிப்பது போன்றவையெல்லாம்தான், இப்படியொரு திட்டம், கிராமப்புற மக்களிடம் பெருமளவு வெற்றிபெற்றதற்கு காரணமாக இருந்து வருகிறது.
கிராமப்புற மக்கள்: இப்படிப்பட்ட சூழலில், இந்த திட்டத்தில் கூடுதல் பலனை பெறும்வகையில், 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.. அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாக, பிரதமர் வீடு கட்டும் திட்டம் திகழ்ந்து வரும்நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பானது, கிராமப்புற மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications