பேச்சு சரியில்லை.. இதெல்லாம் 'பாவச் செயல்ங்க.'. பாஜகவை விளாசும் பிரியங்கா காந்தி
டெல்லி: விவசாயிகள் பற்றி பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்கள் பாவகரமானது என்று, காங்கிரஸ் முன்னணி தலைவர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், ஒரு மாதத்தை கடந்துவிட்டது. ஆனால் இந்த போராட்டம் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகின.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில், விவசாயிகளை இழிவுபடுத்தி பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். நகர்ப்புற நக்சலைட்டுகள், காலிஸ்தானியர்கள், குண்டர்கள் என்று பல பெயர்களில் விவசாயிகள் அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி கூறுகையில், விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளை பற்றி அவமரியாதையாக பேசுவது பெரிய பாவச் செயல் என்றார்.
இதனிடையே, மூன்று "கருப்பு" வேளாண் சட்டங்களை எப்போது திரும்பப் பெறுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
"மோடி ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். விவசாயிகள் இறக்கும் போது அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். விவசாயிகளின் வலியை அவரால் பார்க்க முடியவில்லையா? மூன்று கருப்பு சட்டங்களை அவர் எப்போது திரும்பப் பெறுவார்?". "பாஜக அரசு 'மோடி சர்க்கார்' அல்ல, மாறாக 'கம்பெனி சர்க்கார்'" இவ்வாறு, சுர்ஜேவாலா மேலும் கூறினார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியையும் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications