உலக நாடுகளுக்கு தெரியும் வளர்ச்சி.. எதிரில் இருக்கும் கட்சிகளுக்கு தெரியலயே.. பிரதமர் மோடி கிண்டல்
டெல்லி: உலக நாடுகளுக்கு தெரியும் வளர்ச்சி எதிரில் இருக்கும் கட்சிகளுக்கு தெரியவில்லை என்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. இது இந்தியாவின் பொன்னான வாய்ப்பு. நாட்டின் வளர்ச்சி மீது பாஜக அரசு முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. இதுவே தற்போதைய தேவை. இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. சுமார் 35 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். எங்களது சாதனைதான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனை கொடுத்துள்ளது. விமர்சனம் செய்வதில் மிக கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்து இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் யாரை திட்டுகிறர்களோ அவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள். கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். நாடு வளர்ச்சி அடைவதுஎதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications