பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!
Recommended Video
டெல்லி: நரேந்திர மோடி, நாளை பிரதமராக பதவியேற்கும் விழாவில், அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.

இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இந்த விழாவில் நேபாளம், மொரிஷியஸ், மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்தில் இருந்து சிறப்பு பிரதிநிதி, கிரிசடா பூன்ராஜ் இந்த நிகழ்வில் பங்கேற்பார்.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மியான்மர் அதிபர் யுவின்மையின்ட், மற்றும் கிர்கிஸ்தான் அதிபர், சுரோன்பே ஜீன்பெக்கோவ் ஆகியோரும், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications