Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் சைபர் குற்றங்களை தடுக்கும் போர்ட்டலில் இணைய மறுக்கும் x தளம்! நழுவும் எலான் மஸ்க்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு SAHYOG எனும் போர்ட்டலை செயல்படுத்தி வருகிறது. இதில் நாங்கள் இணைய மாட்டோம் என்று எலான் மஸ்க்கின் சோஷியல் மீடியா தளமான எக்ஸ் (X) முரண்டு பிடித்து வருகிறது.

SAHYOG போர்ட்டல் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) பிரிவு 69A-க்கு உட்பட்ட சட்ட வழிமுறைகளை மீறுகிறது என்பதால் எங்களால் இணைய முடியாது என்று x தெரிவித்திருக்கிறது.

Twitter Delhi High Court

டெக்னாலஜி வளர்ந்திருப்பதால், டிஜிட்டல் முறையிலான மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. மறுபுறம் சைபர் கிரைம்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இதனை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் SAHYOG எனும் போர்ட்டல் உருவாக்கப்பட்டது. சட்டவிரோதமான கன்டென்ட்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும்போது, அதை நீக்க மத்திய அரசு கொடுக்கும் அறிவிப்புகளை தானியங்கி முறையில் சோஷியல் மீடியா நிறுவனங்களுக்கு அனுப்ப இந்த போர்ட்டல் உதவியாக இருக்கிறது.

மட்டுமல்லாது இந்த போர்ட்டல் மூலம் குற்றப்புலனாய்வுத்துறைகள் (Crime Investigation Departments) மற்றும் சட்ட அமலாக்கத்துறைகள் (Law Enforcement Agencies) சமூக ஊடக நிறுவனங்களிடம் நேரடியாக தகவல் கோர அனுமதிக்கிறது. உதாரணமாக ஒருவர் காணாமல் போய்விட்டார் எனில், அவர் கடைசியாக சோஷியல் மீடியாவில் என்ன பகிர்ந்தார்? யாருடன் பேசினார்? போன்ற விவரங்களை SAHYOG மூலம் காவல்துறை கேட்டு பெற முடியும். இதற்கு சோஷியல் மீடியாக்கள் SAHYOG போர்ட்டலில் இணைந்திருக்க வேண்டும்.

ஆனால் x தளம் இதில் இணைய மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது பதிலளித்த x தரப்பு, "SAHYOG போர்ட்டல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 69A-க்கு உட்பட்ட சட்ட வழிமுறைகளை மீறுகிறது. இந்த போர்ட்டல் blocking உத்தரவுகளுக்கான உள்ளடக்கிய சட்ட நடைமுறைகளை புறக்கணிக்கிறது" என்று விமர்சித்திருக்கிறது.

அதாவது ஒரு போஸ்ட்டை நீக்க வேண்டும் எனில் அதற்கான உரிய காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும். இதனை IT Act, Section 69A உறுதி செய்கிறது. ஆனால், SAHYOG போர்ட்டல் காரணங்களை சொல்லாமல் டெலிட் செய்ய உத்தரவிடுகிறது. இதைத்தான் x தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மறுபுறும் x தளத்திற்கு எதிராக மத்திய அரசு சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதைப் பற்றிய தகவல்களை நீக்குவதற்கான கோரிக்கைகள் மீது x உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய சைபர் குற்ற ஒழிப்பு ஒருங்கிணைப்புக் கழகம் (I4C) எழுப்பிய கோரிக்கைகளுக்கு x நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை என, அந்நிறுவனத்திற்கு எதிராக I4C புகார் அளித்துள்ளது.

Telegram, Apple, Google, LinkedIn, YouTube, Microsoft, Facebook, Instagram, WhatsApp என சுமார் 38 நிறுவனங்கள் இந்த போர்ட்டலில் இணைந்திருக்கின்றன. ஆனால் இன்னும் x தளம் மட்டும் இணையாமல் இருப்பது ஏன்?" என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29ம் தேதி நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+