யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு மத்திய அரசு தடை... அதிரடி உத்தரவு
டெல்லி:யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சியை, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்துள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற கட்சியை வழிநடத்தி செல்கிறார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து யாசின் மாலிக் உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் 26ம் தேதி அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.
இது ஒரு தன்னிச்சையான கைது நடவடிக்கை என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சி கண்டித்திருந்தது. இந்நிலையில் அந்த கட்சியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்படும் 2வது கட்சி இதுவாகும். முன்னதாக, ஜமாத் இ இஸ்லாமி கட்சியை மத்திய அரசு தடை விதித்திருந்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications