தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு
டெல்லி: அரசு டாக்டர்களாக பணியாற்றிய கணவன்-மனைவி இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சட்டப்படி திருமண உறவு நீடித்திருந்தாலும், அவர்கள் ஒன்றாக வசிக்கவில்லை. பலமுறை சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியடைந்தன. இவர்களது வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தநிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயிரற்ற திருமண உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோர்ட்டுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலம் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதற்காக எடுத்தவுடனே விவாகரத்து தந்துவிட முடியாது என்பதே இன்றைக்கு நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை பார்த்தால் எதார்த்தமாக தெரியும். எனினும் தம்பதியரிடையே சேர்த்து வைப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்து சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்திருந்தால், இனி அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ 0.1% கூட நடைமுறை சாத்தியமே இல்லை ("உயிரற்ற, உறைந்துபோன உறவு") என்று நீதிமன்றம் முழுமையாகத் திருப்தி அடைந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசு டாக்டர்கள் தொடர்ந்த வழக்கில் கூறியுள்ளது.

அரசு டாக்டர்களாக பணியாற்றிய கணவன்-மனைவி இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சட்டப்படி திருமண உறவு நீடித்திருந்தாலும், அவர்கள் ஒன்றாக வசிக்கவில்லை. பலமுறை சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியடைந்தன. பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசீ தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அதில் கூறுகையில், மனுதாரர் தொடர்ந்த வழக்கில் மனைவி கணவருடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாக கூறினாலும், அதற்கான எந்த நடைமுறை முயற்சிக்கும் வாய்ப்பு இல்லை. இந்த திருமணம் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. மனைவி குஜராத்திலும், கணவர் ராஜஸ்தானிலும் பணியாற்றி வந்து இருக்கின்றனர். திருமண வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான உண்மையான விருப்பம் இருவரிடமும் இல்லை. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மேலும், இருவரும் அரசு மருத்துவர்கள் பொருளாதார ரீதியாக சுயநிறைவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த சூழலில், திருமண உறவை செயற்கையாக நீட்டிப்பதை விட அதை கலைப்பதே நியாயமானது.
நீண்டகாலமாக பிரிந்து வாழும் தம்பதிகளை, எந்தவிதமான சமரச வாய்ப்பும் இல்லாத நிலையிலும் திருமண உறவுக்குள் கட்டாயமாக வைத்திருப்பது நியாயம் கிடையாது. "உயிரற்ற, உறைந்துபோன" திருமண உறவுகளுக்கு கோர்ட்டுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உறவு இறந்துவிட்டால் கட்டாயம் தொடர வேண்டியதில்லை. ஒரு திருமண உறவு உண்மையில் முடிவடைந்து விட்ட நிலையில், அதை சட்ட ரீதியாக உயிருடன் வைத்திருப்பது ஏமாற்றம், மனஅழுத்தம் மற்றும் உளவியல் வெறுமையை மட்டுமே உருவாக்கும்.
மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திருமண வழக்குகளில், தம்பதிகளை உயிரற்ற உறவுக்குள் கட்டாயமாக வைத்திருப்பதைவிட, அவர்களுக்கு பயனுள்ள சட்ட நிவாரணம் வழங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இத்தகைய உறவுகளை முடிவுக்கு கொண்டு வருவது தம்பதிகளின் நலனுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்கும் அவசியம். பல ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வரும் தம்பதிகளை அர்த்தமற்ற உறவில் பிணைத்து வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அத்தகைய உறவுகளில் திருமணத்தின் புனிதத்தன்மையே எஞ்சியிருக்காது.
கடந்த 2023-ம் ஆண்டு ஷில்பா சைலேஷ்-வருண் ஸ்ரீநிவாசன் தம்பதி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில் திருமண உறவு மீள முடியாத வகையில் முற்றிலும் சிதைந்துவிட்டால், பிரிவு 142-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்து வழங்க முடியும் என்று கூறியுள்ளது. அதன்படி இந்த வழக்கிலும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விவாகரத்து வழங்குகிறோம்" இவ்வாறு அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
-
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!














Click it and Unblock the Notifications