Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வெட்கக்கேடு.. கேவலம்".. வேங்கைவயல் கொடூரர்களை இன்னும் தண்டிக்காததே இதற்கு காரணம்: சீறிய பாஜக!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. வேங்கைவயல் குற்றவாளிகளை தண்டிக்காமல் காலம் தள்ளிய கொடுமையே மீண்டும் இது போன்றதொரு அவலத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த தொட்டியில் மலம் கலந்திருந்தது தெரியவந்தது.

BJP attacks dmk government for faeces in water tank in government school dharmapuri

இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்திலேயே இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில் தற்போது தருமபுரி மாவட்டத்தில் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருப்பான, வெட்கக்கேடான, கேவலமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேங்கை வயலில் பட்டியிலன மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்தை செய்த நபர்களை முந்நூறு நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை தமிழக அரசு கண்டு பிடிக்க முடியாததும், அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றியவர்களை தண்டிக்காமல் இது நாள் வரை காலம் தள்ளிய கொடுமையும் தான் மீண்டும் இது போன்றதொரு அவலத்தை நாம் காண வழி வகுத்துள்ளது.

இனி இது போன்ற கேவலங்கள், கொடூரங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு, வேங்கை வயல் மற்றும் பனைக்குளம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சமூக நீதி காக்கிறோம் என்று மார்தட்டி கொள்ளும் திமுக இனி, சமூக நீதி தவறிய திமுக ஆட்சி, தீண்டாமையை ஒடுக்க தவறிய கட்சி என்றே அழைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+