அன்புமணியை மணமுடிக்கும் முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.. யார் இந்த சவுமியா?
சென்னை: பாமக தலைவர் அன்புமணியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் சவுமியா . தருமபுரியில் தற்போது களமிறங்கியுள்ள சவுமியா பிறந்த குடும்ப பின்னணி இப்போதைய தலைமுறையினர் பலரும் அறியாதது.
தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. இவர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தருமபுரியில் அன்புமணி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டார். இவர் தனது வேட்புமனுவில் தனது பெயரில் ரூ 48 கோடியில் அசையா சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 6.85 லட்சம் ரூபாயில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சவுமியா அன்புமணி தனது பெயரில் 12 கோடியே 5 லட்சம் ரூபாயில் அசையும் சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 67 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சவுமியா தனக்கு வங்கியில் 9 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் பதிவு செய்திருக்கிறார்.
சவுமியா அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் பாமக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தருமபுரி தொகுதியில் வெற்றியை பெற்று டாக்டர் ராமதாஸுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக்குவேன் என்றார். மேலும் தேர்தல் என்பது தனக்கு புதிதல்ல, தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார். ஆனால் அன்புமணியை சவுமியா திருமணம் செய்வதற்கு முன்பே அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியுமா.
சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி, ஆரணி லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகி. இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2006 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார். அது போல் இவருடைய சகோதரர் விஷ்ணுபிரசாத். இவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களில் ஒருவர். இவரும் தற்போது ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஷ்ணுபிரசாத்திற்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications