தர்மபுரியில் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன்..இளம் பெண் பிடிவாதம்.. போலீஸ் தந்த ட்விஸ்ட்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேசித்ரா என்பவர் பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சித்ராவிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறு நாட்களுக்கு முன்பு சித்ரா மாயமானார். அவரை போலீசார் தேடிய நிலையில், காவல் நிலையம் வந்தார். அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என இளம் பெண் பிடிவாதம் பிடித்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு என்பது இன்று பல குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்களே இந்த சிக்கலில் அதிகம் சிக்குகிறார்கள். ஆதரவாக இருப்பதாகவும் வரும் ஆண்களை, திருமணமே ஆகி இருந்தாலும் சில பெண்கள் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் முறையாக விவாகரத்து செய்ய விரும்புவது இல்லை. இது தான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது, அதேபோல் திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழும் பெண்கள் முறையாக விவகாரத்து செய்யாமல், வேறு ஒருவரை திருமணம் செய்வது என்பது பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அப்படித்தான் தர்மபுரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (25). பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் இரு ஆண் குழந்தைகளின் தாயாக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் டிக்டாக் நிகழ்ச்சிகளுக்காக இரு பெண்கள் உதவியுடன் பயிற்சி எடுக்கச் சென்றார்.

பிப்ரவரி 3-ம் தேதி, 'டிக்டாக் பயிற்சிக்குச் சென்று வருவதாக' பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியேறிய சித்ரா, 6 நாட்கள் வரை வீட்டுக்கு வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் அதிர்ச்சியுற்ற பெற்றோர், தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் சித்ராவைக் கண்டுபிடித்து, நேற்று தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சித்ரா, 'பெற்றோரிடம் செல்ல மாட்டேன், கள்ளக்காதலுடன் வாழ வேண்டும்' என போலீஸ் முன் தெரிவித்தார். இதை எதிர்த்து பெற்றோர், 'மகளை எங்களுடன் அனுப்புங்கள். அந்த பயிற்சியாளர் பல பெண்களை சீரழித்துள்ளார். பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறி, போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனிடையே கணவனை பிரிந்து பல வருடமாக வாழ்ந்து வந்த சித்ரா கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தாக கூறப்படுகிறது. அவருடன் சென்றால் வாழ்வேன்.. இல்லை என்றால் போக மாட்டேன் என்று பிடிவாதம் தொடர்ந்து பிடித்தாராம். சுமார் 1 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தில், தொப்பூர் போலீசார் 'பெண்ணின் விருப்பப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறினார்களாம். அத்துடன் சித்ராவை - இரு ஆண் குழந்தைகளுடன் கள்ளக்காதலின் தரப்பினருடன் காரில் அனுப்பிவைத்தனர்.
நீதி கேட்டு வந்த குடும்பத்தினர், மகளின் முடிவால் ஆடிப்போனார்கள். போலீசார் சித்ராவை காதலனுடன் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது என்று விரக்தியுடன் சென்றார்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications