தர்மபுரியில் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன்..இளம் பெண் பிடிவாதம்.. போலீஸ் தந்த ட்விஸ்ட்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேசித்ரா என்பவர் பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சித்ராவிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறு நாட்களுக்கு முன்பு சித்ரா மாயமானார். அவரை போலீசார் தேடிய நிலையில், காவல் நிலையம் வந்தார். அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என இளம் பெண் பிடிவாதம் பிடித்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு என்பது இன்று பல குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்களே இந்த சிக்கலில் அதிகம் சிக்குகிறார்கள். ஆதரவாக இருப்பதாகவும் வரும் ஆண்களை, திருமணமே ஆகி இருந்தாலும் சில பெண்கள் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் முறையாக விவாகரத்து செய்ய விரும்புவது இல்லை. இது தான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது, அதேபோல் திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழும் பெண்கள் முறையாக விவகாரத்து செய்யாமல், வேறு ஒருவரை திருமணம் செய்வது என்பது பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அப்படித்தான் தர்மபுரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (25). பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் இரு ஆண் குழந்தைகளின் தாயாக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் டிக்டாக் நிகழ்ச்சிகளுக்காக இரு பெண்கள் உதவியுடன் பயிற்சி எடுக்கச் சென்றார்.

பிப்ரவரி 3-ம் தேதி, 'டிக்டாக் பயிற்சிக்குச் சென்று வருவதாக' பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியேறிய சித்ரா, 6 நாட்கள் வரை வீட்டுக்கு வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் அதிர்ச்சியுற்ற பெற்றோர், தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் சித்ராவைக் கண்டுபிடித்து, நேற்று தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சித்ரா, 'பெற்றோரிடம் செல்ல மாட்டேன், கள்ளக்காதலுடன் வாழ வேண்டும்' என போலீஸ் முன் தெரிவித்தார். இதை எதிர்த்து பெற்றோர், 'மகளை எங்களுடன் அனுப்புங்கள். அந்த பயிற்சியாளர் பல பெண்களை சீரழித்துள்ளார். பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறி, போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனிடையே கணவனை பிரிந்து பல வருடமாக வாழ்ந்து வந்த சித்ரா கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தாக கூறப்படுகிறது. அவருடன் சென்றால் வாழ்வேன்.. இல்லை என்றால் போக மாட்டேன் என்று பிடிவாதம் தொடர்ந்து பிடித்தாராம். சுமார் 1 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தில், தொப்பூர் போலீசார் 'பெண்ணின் விருப்பப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறினார்களாம். அத்துடன் சித்ராவை - இரு ஆண் குழந்தைகளுடன் கள்ளக்காதலின் தரப்பினருடன் காரில் அனுப்பிவைத்தனர்.
நீதி கேட்டு வந்த குடும்பத்தினர், மகளின் முடிவால் ஆடிப்போனார்கள். போலீசார் சித்ராவை காதலனுடன் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது என்று விரக்தியுடன் சென்றார்கள்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications