எதிரெதிர் துருவங்கள் மோதல்.. அரவை ஆலையால் அடித்துக்கொண்ட அதிமுக, திமுகவினர்.. ஒரே பரபரப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது தொடர்பாக திமுகவினர், அதிமுகவினர் இடையே மோதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கூட்டுறவு சரக்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்து கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்புகளை அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வராத வேளாண் அமைச்சர்
இதற்கான துவக்க பணி இன்று துவங்கியது. முன்னதாக கரும்பு அரவையை இன்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் தர்மபுரி கலெக்டர் சாந்தியும் அதில் பங்கேற்கவில்லை.

துவங்கிய களேபரம்
மாறாக கரும்பு ஆலையில் அரவை பணியை துவக்கி வைக்கும் விழாவுக்காக திமுக, அதிமுகவினர் ஏராளமானவர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், கலெக்டர் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து தான் அங்கு களேபரம் துவங்கியது.

திமுக, அதிமுகவினர் மோதல்
அதாவது கரும்பு ஆலையில் அரவையை யார் தொடங்கி வைப்பது என்பது தொடர்பாக அதிமுக, திமுகவினர் இடையே மோதல் துவங்கியது. அதாவது அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கேபி அன்பழகன் அவரது ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சரும் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஒன்றுபோல் கரும்பு அரவையை துவக்கி வைக்க முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இறுதியில் சமாதானம்
அதன்பிறகு சமாதானமடைந்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சரான பழனியப்பன், பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜிகே மணி ஆகியோர் ஒரு புறமும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜ், பாலகோடு எம்எல்ஏ கேபி அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் இன்னொரு புறம் நின்று கரும்பு அரவை பணிகளை துவக்கி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications