Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜி.கே.மணி முன்பே அன்புமணியை விமர்சித்த எம்ஆர்கே பன்னீர் செல்வம்! சிரித்தபடியே சைகை காட்டிய ஜிகேஎம்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரியில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் மீது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் விமர்சனம் செய்திருந்தார். அப்போது ஜி.கே.மணி சிரித்தபடியே சைகையில் வேண்டாம் போதும் என தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

MRK Paneer selvam

தருமபுரியில் சுற்றுலாத் துறையின் சார்பில் ஓகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இந்த விழாவில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "என்ன உரிமை கேட்க போகிறார் என தெரியவில்லை. அது தலைவர் ஜி.கே.மணிக்குத்தான் தெரியும். என்ன உரிமை கேட்க போராடுகிறார்? உரிமையை மீட்க அப்பாவிடம் கேட்க போகிறாரா அன்புமணி என தெரியவில்லை" என்றார்.

மேடையில் இருந்த ஜிகேஎம்

உடனே அங்கு மேடையில் இருந்த ஜி.கே.மணி, சிரித்தபடியே சைகையால் வேண்டாம், என கேட்டதால் அங்கு சிரிப்பலை எழுந்தது. ஜி.கே.மணி முன்பே அன்புமணி குறித்து எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அன்புமணி அல்லது அவரது ஆதரவாளர்கள் யாரேனும் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா- மகன் மோதல்

பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதை தணிக்க பல முறை சமாதான பேச்சு நடத்தியும் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் செயல் தலைவராக அன்புமணி தொடர்வதனால் தொடரட்டும். தலைவர் பதவி கொடுக்க முடியாது என்று ராமதாஸ் சொல்கிறார்.

பொதுக் குழு கூட்டுதல்

இந்த நிலையில் இருவரும் தற்போது போட்டி பொதுக் குழுவை கூட்டுகிறார்கள். பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் - புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.

ராமதாஸ் பொதுக் குழு

இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்​நிலை​யில், ராம​தாஸ் நடத்​தும் கூட்​டத்​துக்கு போட்​டி​யாக ஆக. 9-ம் தேதி பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்​துள்​ளார்.

போட்டி பொதுக் குழு

இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், "பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்" என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

இந்த மோதல் போக்கிற்கு மத்தியில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடமும் ராமதாஸ் மனு அளித்திருந்தார்.

ஒட்டுக் கேட்பு கருவி

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டறியப்பட்டிருந்தது. இதை வைத்தவர்கள் யாரென்று விரைவில் அறிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "தனது இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் என்றால் அது அன்புமணிதான் என தெரிவித்திருந்தார்.

இது என் கட்சி

மேலும் அவர் கூறுகையில், பாமக என்பது நான் உருவாக்கிய கட்சி. 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி. வேறு எவரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அவர் 9ஆம் தேதி பொதுக் குழு என சொல்கிறார். அது கட்சியின் விதிகளுக்கு புறம்பானது என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+