டெண்டர்களில் மூக்கை நுழைத்தார்! 10 ஆண்டுகள் தொல்லை தந்தார்! அதிமுக Ex அமைச்சர் மீது பரபரப்பு புகார்!
தருமபுரி: கடந்த 10 ஆண்டுகளாக சாலை ஒப்பந்தப் பணிகளில் மூக்கை நுழைத்து டெண்டர் கிடைக்கவிடாமல் செய்ததாக அதிமுக மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஒப்பந்ததாரர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
Recommended Video
அண்மையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகி சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இந்நிலையில் பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் அவரை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருக்கிறது.

சாலை ஒப்பந்ததாரர்
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராகவும், தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில பொது செயலாளராகவும் உள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இவர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, ''தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சரும், தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் எனக்கு கிடைக்கும் பல்வேறு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு கிடைக்கவிடாமல் செய்தார்.''

டெண்டர் ரத்து
''ஒருவேளை அப்படியே டெண்டர் கிடைத்தாலும் அவற்றை ரத்து செய்து, கடந்த 10 வருடங்களாக இடையூறு செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை மிரட்டி எனது குடும்ப உறுப்பினர்களை ஒப்பந்தம் எடுக்கவிடாமல் முன்னாள் அமைச்சர் தடுத்து வந்தார். பெரும்பான்மையான ஒப்பந்தங்களை தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், தன் பினாமிகளுக்கும் மட்டுமே ஒப்பந்தம் வழங்கிவந்தார்.''

பேக்கேஜ் ஒப்பந்தம்
'' இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தருமபுரி நெடுஞ்சாலை கிராம சாலை கோட்டத்தில் அவரது பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பேக்கேஜ் ஒப்பந்தம் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் நான் முறையாக பங்கேற்றும், அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யவிடாமல் முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவரது மருமகன் ரவிசங்கர் மூலம் நீதிமன்றம் சென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தார்.''

அரவை மில்
''கடந்த திமுக ஆட்சியில் அன்றைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தருமபுரி மாவட்டத்தில் 30 அரவை மில் இருந்ததை 105 அரவை மில்லாக உயர்த்தினார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அரவை மில் மூடக் காரணமாக இருந்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் '' என பரபரப்பு குற்றசாட்டுகளை செய்தியாளர்களிடம் ஒப்பந்ததாரர் பாஸ்கர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications