தருமபுரி அருகே விவசாயி மீது துப்பாக்கிச் சூடு... வேட்டைக் கும்பல் அட்டகாசம்
தருமபுரி: தருமபுரி அருகே வேட்டைக் கும்பல் ஒன்று நாட்டுத் துப்பாக்கியால், விவசாயி ஒருவரை சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளது. அந்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கடுக்காய் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (32) தன்னுடைய விவசாய நிலத்திற்கு இரவு நேரத்தில் காவலுக்கு செல்வது வழக்கம். நேற்றிரவு தோட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் டார்ச் லைட் கொண்டு முயல் வேட்டையாட வந்துள்ளனர்.

இதனை கண்ட சேகர், அவர்களை தனது இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். முயல் வேட்டைக்கு வந்தவர்களும் அவர்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த சேகர் பாப்பாரப்பட்டி மின் வாரியம் அலுவலகம் வரை துரத்திச் சென்று உள்ளார்.
அப்போது, வேட்டைக்கு வந்த மூன்று நபர்களும், சேகரை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடுப்புப் பகுதிக்குக் கீழ் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தது. இதனை அடுத்து, வேட்டைக்கு வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
துப்பாக்கி குண்டுகளால் காயம்பட்ட சேகர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சில தினங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(38). இவர் 2 நாய்களை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெருமாள்(28) என்பவரும் நாயை வளர்த்து வருகிறார்.
இருவர் வளர்க்கும் நாய்களும் சண்டையிட்டுக் கொண்டன. இதை கண்டு ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியால், பெருமாள் வளர்த்து வரும் நாயை நோக்கி சுட்டார். இதில் நாய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நாயை சுட பயன்படுத்திய ஏர்கன் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், வேட்டையாட வந்த கும்பல், விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications