ஜாலியாக இருந்த கள்ளஜோடி.. சைலண்டாக வந்து தாழ்ப்பாள் போட்ட மக்கள்.. கடைசியில் பெண் எடுத்த முடிவு
கள்ளக்காதலால் அவமானப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்
தர்மபுரி: வீட்டிற்குள் ஒரு காதல் ஜோடி ஜாலியாக இருந்த நிலையில், விஷயம் தெரிந்த அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டனர்.. இதனால் அவமானம் தாங்க முடியாத அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது பூதிநத்தம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் வேடியப்பன். 38 வயதாகிறது.. மனைவி பெயர் ஜமுனா.. திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன.
இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்... வேடியப்பன் ஒரு கட்டிட மேஸ்திரி.. பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. அதனால் 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

அதிர்ச்சி
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அனுமந்தன் என்பவருடன் ஜமுனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்... இது அந்த பகுதி மக்களுக்கும் தெரிந்துள்ளது.. வழக்கம்போல் ஒருமுறை ஊருக்கு வந்தபோது, இந்த கள்ளக்காதல் ஜோடி பற்றி வேடியப்பனிடம் சிலர் சொல்லி உள்ளனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த வேடியப்பன், மனைவியை கண்டித்தார்..

ரகசிய உறவு
பிறகு ஊர் பெரியவர்களிடமும் இந்த விஷயத்தை கொண்டு போனார்.. அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.. ஊர் பெரியவர்களும் இனி 2 பேரும் கள்ள உறவை தொடர கூடாது என்று கண்டித்தனர். ஆனாலும் கள்ள ஜோடியின் உறவு தொடர்ந்தது.. ரகசியமாக இரவு நேரங்களில் சந்தித்து வந்துள்ளனர். அப்படித்தான், கடந்த 29ம் தேதி ஜமுனாவின் வீட்டிற்கு அனுமந்தன் வந்துள்ளார்.. இருவருமே ஜாலியாக இருந்துள்ளனர்.. ஆனால், இதை அக்கம் பக்கத்தினர் கவனித்துவிட்டனர்..

எச்சரிக்கை
அதனால் கள்ளக்காதல் ஜோடி வீட்டிற்குள் இருக்கும்போதே, அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி, இருவரையும் சிறை வைத்தனர்... பிறகு, பெங்களூருவில் உள்ள வேடியப்பனுக்கும் தகவல் தந்து வரவழைத்தனர்... வேடியப்பனும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. பிறகு மறுபடியும் 2 பேரையும் கண்டித்துவிட்டு, மனைவியை கூடுதலாகவே எச்சரித்து விட்டு பெங்களூருக்கு மறுபடியும் வேலைக்கு சென்று விட்டார்.

தற்கொலை
ஆனால், பொதுமக்களிடம் வசமாக சிக்கியதில் இருந்தே ஜமுனா கூனிகுறுகி போனார்.. அவமானம் தாங்காமல் புழுங்கினார்.. ஒருகட்டத்தில் அவமானம் தாங்காமல் ஜமுனா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி போலீசார், ஜமுனாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications