நத்தத்தில் பயங்கரம்! தம்பியின் மனைவி, இரண்டரை வயது குழந்தையை எரித்துக் கொன்ற அண்ணன்... ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நத்தம் அருகே தம்பியின் மனைவியையும் அவரது குழந்தையையும் அண்ணன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நத்தம் அருகே மலையூரை அடுத்துள்ள வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான கருப்பையா திருமணம் செய்துகொள்ளவில்லை. தம்பி சிவக்குமாருக்கு அஞ்சலை (21) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மலர்விழி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.

Brothers wife and 2 year old child burnt in Dindugal Natham

தற்போது அஞ்சலை 4 மாத கர்ப்பினியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக சிவக்குமார் வெளியூர் சென்று இருக்கிறார். மாலை அஞ்சலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு வெட்டுவதற்காக சென்ற சிவக்குமாரின் சகோதரர் கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அஞ்சலை எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கருப்பையா அவரை அரிவாளால் வெட்டியதாகவும், அதன் பின்னர் அஞ்சலையின் பெண் குழந்தையை கருப்பையா கொலை செய்துவிட்டு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தோட்டத்தில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசர் தீவிர விசாரணை நடத்தியதில் அஞ்சலையையும் அவரது குழந்தையையும் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+