Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி

பேய் அழைப்பதாக சொல்லி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: "அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." என்று லட்டர் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் லத்திகா... இவர் ஒரு கல்லூரி மாணவி.. இப்போது லாக்டவுன் என்பதால் வீட்டில்தான் இருந்துள்ளார்.. 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பிறந்தநாள் வந்தது.

 college student committed suicide near dindigul

அந்த பிறந்த நாளை வீட்டில் உள்ளவர்கள் நல்ல முறையில் கொண்டாடினார்கள்.. லத்திகாவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.

எத்தனையோ முறை கேட்டு பார்த்தும், எந்த பதிலையும் லத்திகா சொல்லவில்லை.. இந்நிலையில், இவர் தன்னுடைய ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... மகளின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போது லத்திகா ரூமில் இருந்த ஒரு லட்டரையும் கைப்பற்றினர்.. தற்கொலை செய்வதற்கு முன் அவர் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அதில், ''அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்திட்டே இருக்காங்க.. நைட் நேரத்துல தூக்கம் வர்றது இல்லை.. நைட் முழுக்க என்னை சாகறதுக்கு வா, வா-ன்னு கூப்பிடறாங்க... இதை வெளியில் யார்கிட்டயாவது சொன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்னு அந்த பேய் சொல்லுது.. தினமும் என்னை சாக கூப்பிட்டுட்டே இருக்கு.. என்னை ஏதாவது பண்ண சொல்லுதுப்பா.. இல்லைனா நம்ம குடும்பத்தை அழிச்சிடுவேன்னு சொல்லுது.

யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க.. அதனால என் பொருள், நான் பயன்படுத்திய பொருள் எதையும் வீட்டில் தயவு செய்து வைக்காதீங்க.. எல்லாம் நல்லதுக்குத்தான்.. தம்பி, தங்கச்சி, நீங்க 2 பேரும் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க... லவ் யூ மை ஃபேமிலி,'' என எழுதி வைத்துள்ளார்.

Recommended Video

    இயல்பு நிலைக்குத் திரும்பிய திண்டுக்கல்

    https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-shobana-suicide-issue-police-arrested-three-including-husband-391588.html

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+