திண்டுக்கல் சட்டசபை தொகுதி- 8 வது முறையாக களம் வெல்லுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி?
திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 முறை வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8-வது முறையாக வெல்லும் முனைப்பில் களப் பணியாற்றி வருகிறது.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம். பாண்டி போட்டியிடுகிறார்.

7 முறை வெற்றி
திண்டுக்கல் தொகுதியானது இடதுசாரிகளின் கோட்டை என்கிற அளவுக்கு 7 முறை வென்ற தொகுதி. 1967, 1977, 1980, 1989, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அசத்தல் வெற்றிப் பெற்று தந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்.

ஹாட்ரிக் வெற்றி
மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களான பாலசுப்பிரமணியம், என். வரதராஜன் ஆகியோர் வென்ற தொகுதி. 2001 முதல் 2011 வரை அடுத்தடுத்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் வென்ற தொகுதி. 2006, 2011 தேர்தல்களில் பாலபாரதி போட்டியிட்டு தொடர்ந்து வென்றார்.

சர்ச்சை சீனிவாசன்
தற்போதைய அதிமுக வேட்பாளர் அமைச்சர் சீனிவாசன் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தொகுதியில் அடிப்படை வசதிகளை இன்னமும் நிறைவு செய்துதரவில்லை என்ற குறை மக்களிடத்தில் உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூட சில இடங்களில் சீனிவாசன் முற்றுகையிடப்பட்டார்.

அதிமுக- சிபிஎம் கடும் போட்டி
இதனால் 8-வது முறையாக திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வசமாகும் என்கிற எதிர்பார்ப்பு தோழர்களிடத்தில் இருக்கிறது. இருந்தபோது எப்படியும் போராடி வென்றால்தான் அரசியல் எதிர்காலம் என்பதை புரிந்து கொண்டு சீனிவாசனும் டஃப் பைட் கொடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications