'ஐயையோ தெரியாதனமா திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன்.. என்னய எப்படியாச்சும் காப்பாத்துங்கடா'
திண்டுக்கல்: ஐயையோ தெரியாதனமா திண்டுக்கல் பஸ் ஸ்டண்டுக்கு வந்துட்டேன்... என்னய எப்படியாச்சும் காப்பாத்துங்கடா... என்று வடிவேலு மீம்ஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. உண்மையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு ஏன் இந்த அளவிற்கு கலாய்க்கப்படுகிறது என்பது அந்த ஊரை தாண்டி சென்ற அத்தனை பேருக்கும் தெரியும். அதை நாம் இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திண்டுக்கல் மாநகரம் தவிர்க்க முடியாத பட்டியலில் இருக்கும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எல்லாமே திண்டுக்கல் வந்து தான் போக முடியும். இதேபோல் கொடைக்கானல், சபரிமலை, தேனி, பழனி போக வேண்டும் என்றாலும் திண்டுக்கல் தாண்டிதான் போக வேண்டும்.

அதேபோல் கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர், நாமக்கல், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களை மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கியமான ஊராக திண்டுக்கல் இருக்கிறது. திண்டுக்கல் வழியாகவே கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு, ஹைதரபாத், மும்பை செல்ல திண்டுக்கல் வழியாகத்தான் போக முடியும்.
திண்டுக்கல் மாநகரம் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தில் மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் மிக முக்கியமான நகரமாகும். திண்டுக்கல் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. மக்கள் தொகையும் மிக அதிகமாகும். ஆனால் திண்டுக்கல் மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்த போதும், அங்கு அடிப்டை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

குறிப்பாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கழிவறை நாத்தத்திற்கு மிகப்பிரபலம். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் கழிவறைகள் மிகமிக மோசமாக இருக்கும். கழிவறை பராமரிப்பு என்பது சுத்தமாக இருக்காது. அங்குள்ள கட்டண கழிப்பறைகள் பார்த்தால் வாந்தி வந்துவிடும். இதுஒருபுறம் எனில் பேருந்து நிலையத்தில் உள்ள ஓபன் கழிவறை காரணமாக பேருந்தில் ஏற செல்லும் மக்கள் நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.இதோ சில நாட்கள் இப்படி இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.
பல வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது. திண்டுக்கல் வந்துவிட்டது என்பதை பேருந்தில் உள்ளவர்கள் கழிவறை நாற்றத்தை வைத்து அறிந்துவிடலாம். அவ்வளவு மோசமாக இருக்கும். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளி கழிப்பறைகளை முழுவதாக மூடுவதுடன், கட்டணக்கழிப்பறைகளை மாற்றி சிறப்பாக கட்டிடத்தில் அதனை பராமரித்தால் தான் மூச்சுக்கூட விட முடியும் என்ற நிலை இருக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.

அதனால் தான் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டை வைத்து மீம்ஸ் போடும் அளவிற்கு மோசமாக உள்ளது. இனியாவது திண்டுக்கல் பேருந்து நிலையத்தினை சிறப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications