Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் 2 நாட்கள் மூடப்படும் டாஸ்மாக்..தீபாவளி அதுவுமா மது பிரியர்களுக்கு ஷாக்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29 மற்றும் 30ஆம் தேதி மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

dindigul tasmac deepali

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என குறிப்பிட்ட நாட்கள் மூடப்படும். இது தவிர குறிப்பிட்ட சில தினங்களில் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளை மூட சூழ்நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி திண்டுக்கல் எல்லை பகுதிகளில், டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் 30-ம் தேதி அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29-ம் மற்றும் 30-ம் தேதி மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது .

அதன்படி, அம்மையநாயக்கனுார் பகுதியில் கொடைரோடு(கடை எண் 3161), மாலையகவுண்டன்பட்டி(கடை எண் 3162), பள்ளபட்டி சிப்காட்(கடை எண் 3342), கொடைரோடு (எப்எல் 2 உரிமம் எண் 38/2020-2021(பார்), விளாம்பட்டி பகுதியில் கிருஷ்ணாபுரம்(கடை எண் 3345), விளாம்பட்டி(கடை எண் 3343), அணைபட்டி(கடை எண்3341), விருவீடு பகுதியில் ரெங்கப்பநாயக்கன்பட்டி(கடை எண் 3318), விருவீடு (கடை எண் 3344) ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும், என ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+