திண்டுக்கல் கொடுமை! மாங்காய் திருடிய குரங்கு சுட்டுக் கொலை- சமைத்து சாப்பிட்ட இருவர் அதிரடி கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குரங்குகளை சுட்டுக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டதாக இருவரை சிறுமலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாந்தோப்பில் மாங்காய் திருடியதற்காக குரங்குகளை சுட்டுக் கொலை செய்து கறி சமைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ளது. திண்டுக்கம் மாநகரை ஒட்டி கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக சிறுமலை அமைந்துள்ளது. சிறுமலை அடிவார கிராமங்களில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன; அதேநேரத்தில் சிறுமலை பகுதிகளில் பிற பகுதிகளைவிட குரங்குகளின் அட்டகாசம் மிக அதிகமாகவே இருக்கின்றன.

இதனாலேயே திருமலைக்கேணி முருகன் கோவிலில் வலம் வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குரங்குகள் கூண்டு வைத்து வேட்டையாடப்பட்டு அழகர் கோவில் மலைப் பகுதியில் விடப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இந்த பின்னணியில்தான் வீரசின்னம்பட்டியில் இருவர் குரங்கை சுட்டுக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டனர் என சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், வீரசின்னம்பட்டி ராஜாராம், தவசிமடை வடுகபட்டி ஜெயமணி ஆகியோரை கைது செய்தனர்.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேட்டரிங் மாஸ்டரான ராஜராமுக்கு சொந்தமான மாந்தோப்பில் குரங்குகள் அதிகமாக சேட்டை செய்து வந்துள்ளன. அதிலும் ஒரு குரங்கு நாள்தோறும் மாந்தோப்பில் வந்து மாங்காய்களை திருடி சாப்பிட்டதுடன் சேதப்படுத்தியும் வந்துள்ளது; இதனால் வடுகபட்டி ஜெயமணியை அழைத்து ரூ1,000 கொடுத்து குரங்குகளை சுட்டுக் கொல்ல பேரம் பேசியிருக்கிறார்.
இதனால் ஜெயமணியும் நாட்டு துப்பாக்கி மூலம் தினந்தோறும் சேட்டை செய்த குரங்கை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றிருக்கிறார். இதிலும் ஆத்திரம் அடங்காத ராஜாராம், அவரது மாந்தோப்பிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கை சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக குரங்கையும் கடிச்சிட்டீங்களே அப்புகளா!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications