Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன மஞ்சள் பைத்தியம்? தீவு தாண்டிய “அரக்கர்கள்” - திண்டுக்கலில் திக் திக் - உயிர்களுக்கு ஆபத்து

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நத்தம் அருகே மலையடிவாரத்தில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவி இருக்கும் மஞ்சள் பைத்தியம் எறும்புக் கூட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ளது வேலாயுதம்பட்டி கிராமம். இங்குள்ள கரந்தமலை அடிவாரத்தில் மஞ்சள் பைத்தியம் என்ற அரிய வகை எறும்புக் கூட்டம் சில மாதங்களாக அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

இந்த எறும்புகள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருக்கும் பயிர்களையும், காய்கறிகளையும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

பயிர்கள் மட்டுமின்றி மனிதர்கள், வன விலங்குகள், கால்நடைகளையும் இந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள் விட்டுவைப்பதில்லை. உடல்களின் மீது கூட்டமாக ஏறி கடித்துக் வைப்பதாக புலம்புகின்றனர் கிராம மக்கள். மலையில் வாழும் காட்டெருமைகள், முயல், மான், குள்ளநரிகள், மயில் போன்றவை இதனால் பாதிக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அதிகரிக்கும் எண்ணிக்கை

மண் நிறத்தில் இருக்கும் இந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள் ஊர்ந்து வருவதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் அவற்றை தடுப்பதும் சிரமமான காரியமாக இருக்கிறது. தொடர்ந்து மஞ்சள் பைத்தியம் எறும்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து இருக்கின்றனர்.

ஆய்வு

ஆய்வு

இது குறித்து தகவலறிந்த பெங்களூரு அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையை சேர்ந்த பூச்சியியலாளர் பிரியதர்ஷன் தர்மராஜன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் கரந்தமலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்றனர். அங்கு அதிகளவில் காணப்பட்ட சில மஞ்சள் பைத்தியம் வகை எறும்புகளை எடுத்துச் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தீவு

கிறிஸ்துமஸ் தீவு

ஆய்வுக்கு பிறகே எறும்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முதல் கட்டமாக எறும்புகளின் அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக்கொள்ள சில மருந்துகள் மக்களிடம் வழங்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், இந்த மஞ்சள் பைத்தியம் எறும்பு இந்திய பெருங்கடலில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து பெரும் கூட்டமாக உள்ளதாக கூறியுள்ளார்கள்.

அழிந்த நண்டுகள்

அழிந்த நண்டுகள்

மஞ்சள் பைத்தியம் எறும்புகள் தாக்கியதில் அங்கு ஏராளமான நண்டுகள் உயிரிழந்து இருப்பதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் இவை இரைதேடும் என்றும், மற்ற நாடுகளில் மஞ்சள் பைத்தியம் எறும்புகளால் ஏற்பட்ட பேரழிவை உணர்ந்து, இங்கு இதை தடுக்காவிட்டால் சுற்றுச்சூழல் அழிந்து தாவரங்கள், உயிரிழனங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார்கள்.

வராத விலங்குகள்

வராத விலங்குகள்

இந்த எறும்புகள் இருக்கும் இடத்தில் வேறு பூச்சி இனங்கள், சிறிய விலங்குகள் இருக்காது என்றும், திண்டுக்கல் வேலாயுதம்பட்டியிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். மஞ்சள் பைத்தியம் எறும்புகள் விலங்குகளின் கண் மற்றும் பிறப்புறுப்பில் தென்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+