Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஞாபகம் இருக்கா திண்டுக்கல் பாஜக சரஸ்வதியை? பழனி கோயில்ல மோடிக்காக மடிப்பிச்சை கேட்டாரே? இப்ப பாருங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் சரஸ்வதியின் கோயில் பிரார்த்தனை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவில், 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..

Dindigul Narendra Modi PM Modi Palani Temple Saraswathi Annamalai

பாஜகவின் ஆட்சி: இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் தயவால் 3வது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA - என்.டி.ஏ.) தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத்தவிர, இந்தியா முழுவதுள்ள அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

முன்னதாக மோடி மீண்டும் 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும், விசுவாசிகளும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்திருந்தனர்.

Dindigul Narendra Modi PM Modi Palani Temple Saraswathi Annamalai

திருவண்ணாமலை: அந்தவகையில், மாநில தலைவர் அண்ணாமலையும், திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டிருந்தார். 3வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர, அருணாசலேஸ்வரரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது என்றும் இதனை சிவபெருமான் நிறைவேற்றி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அண்ணாமலை அபபோது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுபோலவே, பாஜக சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் பெண் நிர்வாகி சரஸ்வதி என்பவரும் பழனியில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.. அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் 28-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகமும் பெற்றார் சரஸ்வதி..

அண்ணாமலை போட்டோ: கோவில் வாசலில், அண்ணாமலை போட்டோவுடன் உட்கார்ந்து கொண்ட சரஸ்வதி, கோயிலுக்குள் வந்து செல்வோரிடம் யாசகம் பெற்றார்.. பிறகு அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலிலேயே செலுத்தி வழிபட்டார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடமும் சரஸ்வதி பேசியிருந்தார்.. அப்போது, "மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வேண்டும், கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்து அதனை இன்று நிறைவேற்றினேன்... தேர்தலில் மோடி வெற்றிபெற்று 3வது முறையாக பதவியேற்கும் நாளில் மறுபடியும் முருகனிடம் என்னுடைய காணிக்கையை வழங்குவேன்" என்று கூறியிருந்தார்.

பழனி சரஸ்வதி: இந்நிலையில், மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார். இதனை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்... இப்படிப்பட்ட சூழலில், சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி மீண்டும் பழனிக்கு நேற்று வந்தார்.

3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருப்பதையொட்டி அவர், பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த உள்ளதாக சொன்னார்.. பிறகு, மோடியின் உருவப்படம் கொண்ட முகமூடியை முகத்தில் அணிந்துகொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்.. சரவணப்பொய்கை முடிக்காணிக்கை நிலையத்திற்கு சென்று பூமுடி செலுத்தினார்... இதனையெல்லாம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தபடி நின்றனர்.

மீண்டும் பரபரப்பு: சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி, ஏற்கனவே பழனி கோவிலுக்கு வந்து 3-வது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மோடிக்காக தலைமுடியை காணிக்கை செலுத்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+