Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐ.பெரியசாமி வீட்டில் ஈடி ரெய்டு..முக்குலத்தோரை குறிவைத்த அதிமுக-பாஜக? திண்டுக்கல்லில் திடீர் போஸ்டர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திமுக துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் முக்குலத்தோரை குறி வைத்து வேட்டையாடும் நோக்கில் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத் துறையை ஏவியதாக அதிமுக பாஜக கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்து தேவர் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக அமைச்சர்களில் தென் மாவட்டங்களில் மிக முக்கியமானவர் ஐ.பெரியசாமி. தற்போது திமுக துணை பொது செயலாளராகவும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளராக இருந்தவரை மாவட்ட அரசியலில் கூட அவ்வளவாக அவரை தெரியாது.

1970 காலகட்டத்தில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது எம்ஜிஆர் வத்தலக்குண்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என தொண்டர்களுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியவர். அதனால் அவரை அடையாளம் கண்ட கலைஞரால், மாவட்ட செயலாளராகவும், தொடர்ந்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

ED Raid on Minister I Periyasamy

ஐ.பெரியசாமி

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ பெரியசாமியின் வீடு, அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு, மகள் இந்திராவின் வீடு மற்றும் நூற்பாலைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. 11 மணி நேரத்திற்கு மேலாக ஐ.பெரியசாமியின் வீட்டிலும், 15 மணி நேரம் ஐபி செந்தில்குமார் வீட்டிலும், 17 மணிநேரம் இந்திராணியின் வீட்டிலும் சோதனை நடந்தது.

அமலாக்கத்துறை

இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நகை, பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த முழு விவரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. சட்டவிராத பண பரிமாற்ற வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது என்பதை இதுவரை அமலாக்கத்துறை அறிவிக்கவில்லை. அது தொடர்பான அறிக்கை இன்னும் சில தினங்களுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதி அரசியல்

இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக திமுக கூறியிருக்கிறது. மேலும் இதுபோன்ற சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர்எஸ் பாரதி. இது ஒரு புறம் இருக்க ஒரு நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர கூட அனுமதிக்காமல் அமலாக்கத்துறை பெரியசாமியை டார்ச்சர் செய்ததாக புகார் சொல்லுகின்றனர் திமுகவினர்.

தேவர் பேரவை

இந்த நிலையில் அமைச்சர் சாமிக்கு ஆதரவாக சமுதாய அமைப்புகளும் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் ஐ.பெரியசாமி முக்குலத்தோர் என்பதால் சாதி ரீதியாக அவரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் தேவரின அமைப்புகள். இந்த நிலையில் அமைச்சராக பெரியசாமிக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தை குறிவைத்து பழிவாங்கும் இடத்தில் ஐ.பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையை ஏவிய அதிமுக பாஜக கூட்டணியை கடுமையாக கண்டிப்பதாக தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+