செம ட்விஸ்ட்.. மோடியை வரவேற்க.. ஒன்றாக நின்ற எடப்பாடி - ஓபிஎஸ்.. மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
திண்டுக்கல்: மதுரையில் பிரதமர் மோடியை இன்று ஏர்போர்ட்டில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு செல்கிறார்.

மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடியை இன்று வரவேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் சென்றார். இதற்காக எடப்பாடி பழனிசாமி முன்பே நேரம் கேட்டு இருந்தார். அதன்படியே அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலையே மதுரைக்கு சென்றார். மதுரை விமான நிலையத்தில் பிற்பகலில் இருந்தே எடப்பாடி காத்துகொண்டு இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் மோடியை வரவேற்க நேரம் கேட்டு இருந்தார். அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று தொடக்கத்தில் தகவல்கள் வந்தன. மோடியை சந்திக்க வேண்டும் என்றும் நேரம் கேட்டு இருந்தார். இந்த நிலையில் மோடியை வரவேற்க ஓ பன்னீர்செல்வத்திற்கும் கடைசியில் நேரம் கொடுக்கப்பட்டது. இதனால் அவரும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
இரண்டு பேருமே ஒன்றாக இன்று விமான நிலையத்தில் இருந்தனர் . ஆனால் அருகருகே நிற்காமல் கொஞ்சம் தள்ளி இருந்தனர். இடையில் சில அதிகாரிகள் இருந்தனர். இரண்டு பேருமே ஒன்றாக மோடியை வரவேற்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளவில்லை.

இரண்டு பேர்
இரண்டு பேரும் பேசும் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் மாலை வரை விமான நிலையத்திலேயே இருப்பார்கள். மோடி செல்லும் வரை அவரை வழியனுப்ப இவர்கள் உள்ளேயே இருப்பார்கள்.மோடி திரும்பி செல்லும் போது அவரை வழியனுப்பார்கள். இரண்டு பேருமே மோடியை தனியாக சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் இவர்களுக்கு தனியாக சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!











Click it and Unblock the Notifications