பட்டையக் கிளப்புது தமிழக அரசு.. மாதம் அக்கவுண்டுக்கு வரும் ரூ.7,000! இதை மட்டும் செய்தாலே போதுமே!
திண்டுக்கல்: தமிழக அரசின் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் மாதாந்திர உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட உதவிகள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அது மட்டும் அல்லாமல் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்லூரி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் மூலம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவியரின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், தடையில்லா சான்று ஆகியவற்றுடனும். மேலும், 9ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்திற்கும் குறையாமல் இருத்தல் வேண்டும்) ஆகியவற்றுடன் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர் கையொப்பம், கல்லூரி முதல்வர் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
9-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேசிய அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல் 1. குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவிகள் வங்கி கணக்குப் புத்தக நகல் 1. பிற துறைகளில் வகுப்பு வாரியான கல்வி உதவித்தொகைக்கு பள்ளி மற்றும் கல்லூரி வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறவில்லை என்பதற்கான பள்ளி மற்றும் கல்லூரி முதல்வரின் தடையில்லா சான்றுடன். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 22.07.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்(0451-2460099) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வழங்கப்படும் வகுப்பைப் பொறுத்து மாறுபடும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.2,000, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.6,000, ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ.4,000, இளங்கலை பட்டம் ரூ.6,000 மற்றும் முதுகலை பட்டம் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மேலும், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
அந்தரங்க அறையான ஆஸ்பத்திரி..அறைகுறை ஆடையுடன் சிக்கிய நபர்! கூட இருந்தது நர்ஸா? புகாரும்..விளக்கமும்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications