விடாத அமலாக்கத்துறை.. திமுக நிர்வாகியின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீடு, தோட்டத்து பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று நாமக்கலில் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக வீரா எஸ்.டி சாமிநாதன் உள்ளார். இவருக்கு சொந்தமாக பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ பள்ளியையும் நடத்தி வருகிறார். இதுமட்டும் இன்றி வேடசந்தூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான நிதிநிறுவனங்களும் உள்ளன. இவருக்கு சொந்தமாக கல்லூரியும் உள்ளது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

இவர் டாஸ்மாக் பார் நடத்துவதற்காக அனுமதி வழங்க 25 மாவட்டங்களில் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை நேற்றைய தினம் சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் இரு குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்று மாலை 6.20 மணி வரை அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் பற்றிய எந்த விவரத்தையும் அமலாக்கத்துறையினர் தெரிவிக்க மறுத்து விட்டனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை திமுகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வேடசந்தூர் சாமிநாதன் உறவினரான காளியப்பன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள காளியப்பன் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக அவரது உறவினரான டயர் மணி என்ற காளியப்பன் வீட்டிலும் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.
நேற்று வேடசந்தூரில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். உதவியாளர் சங்கர் வீடு உட்பட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. சங்கர் வீட்டில் இல்லதாதால் அவரது வீட்டின் உரிமையாளர் நேமநாதன் முன்னிலையில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் பல மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சோதனை மாலையில் நிறைவடைந்தது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்












Click it and Unblock the Notifications