திண்டுக்கல்லு திண்டுக்கல்லு.. 1 ஆடு இம்புட்டா? ரூ.6500க்கு மாட்டு வண்டியில் ஏறிய செம்மறி ஆடு.. ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டமே பிஸியாக உள்ளது.. இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் கால்நடை சந்தைகள் களைகட்டிவிட்டன.

தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்துவிடுவதையும் தமிழக பக்தர்கள் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதனால், இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Dindigul Goat Aadi Velli

சில பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு படையெடுத்துவிடுகிறார்கள்.. இதற்கு காரணம், பக்கத்து மாநிலங்களில் விலை குறைவாக இருப்பதுடன், கால்நடைகள் நோய் இல்லாமல் இருக்குமாம்..

திருவிழாக்கள்: அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகள் இந்த மாதம் பிஸியாகவே காணப்பட்டு வருகின்றன.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உட்பட தென் மண்டலங்களிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆடி மாத விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேர்த்திக்கடனுக்காக, பக்தர்கள் சிலர் முன்கூட்டியே ஆடு, கோழிகளுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்..

திருவிழா காலங்களில் விலை அதிகரிக்கலாம் என்பதால் பக்தர்கள் அட்வான்ஸ் தந்து ஆடுகளை வாங்கினார்கள்.

ஆடிமாதம்: இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், ஆடு விற்பனை முன்கூட்டியே சூடுபிடித்துவிட்டது. அதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அய்யலூர் ஆட்டு சந்தையானது, ஆடுகள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி கோழிகளும் விற்பனையாகின்றன.

மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், இந்த சந்தைக்கு வியாபாரிகள் வந்து, ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.. நிறைய பேர், இதற்காகவே வண்டியை எடுத்துக் கொண்டு ஆடுகளை அதில் ஏற்றிக் கொண்டு செல்வார்கள். இதனால், வார வாரம் அதிகாலையிலேயே வியாபாரிகள் இங்கு குவிந்துவிடுவார்கள்.

Dindigul Goat Aadi Velli

விடிகாலை: இன்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், கிராமப்புற கோவில்களில் கிடா வெட்டும் வைபவம் அதிகமாகவே இருக்கும். எனவே, நேற்று விடிகாலையிலேயே 3 மணிக்கு விவசாயிகளும், வியாபாரிகளும் அய்யலூர் சந்தையில் குவிந்துவிட்டனர்..
10 கிலோ வெள்ளாட்டு கிடா ரூ.11,000க்கும், செம்மறி ஆடுகள் ரூ.6500க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்..

டிராபிக் ஜாம்: இப்படி ஆடுகளை விற்கவும், வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் அய்யலூரில் திரண்டுவந்துவிட்டதால், திருச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+