திண்டுக்கல் வங்கிக்கு ட்விஸ்ட்.. கோடீஸ்வரராகிய நகை மதிப்பீட்டாளர்.. கடைசியில் சிக்கியது எப்படி?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தூரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் போலி தங்க நகை அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 3 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி நகைகளை அடகு வைத்து எப்படி மோசடி செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
தங்க நகைகளின் விலை ஒரு பவுன் 72 ஆயிரம் என்கிற அளவில் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த ஓராண்டில் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதால் நகை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்துள்ளது. அதேபோல் சிலர் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுவிடுகிறார்கள். சில வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களே போலி நகைகளை அடகு வைத்து வங்கியிடம் கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளனர். அப்படி ஒரு தவறு தான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வங்கியில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி பொது மேலாளர் வின்ஜமுரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
1 கோடி மோசடி
அந்த மனுவில் அவர் கூறுகையில், "எங்கள் வங்கியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறு நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 55 வயதாகும் கருப்பாயி , அவருடைய உறவினர்கள் சோனாஸ்ரீ (26), தங்கராஜ் ஆகியோர், ரூ.1 கோடியே 25 லட்சம் கடனுக்காக வங்கியில் அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நகை மதிப்பீட்டாளரின் உதவி
பின்னர் நடத்திய விசாரணையில், எங்கள் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்க்கும் பாண்டிகுமார், மறு நகை மதிப்பீட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் உதவியுடன் கருப்பாயி மற்றும் அவரின் உறவினர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலி நகைகள் அடகு
இந்த மனுவை பெற்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் உள்பட 5 பேரும் சேர்ந்து போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்தது உறுதியானது.
3 பேர் கைது
இதையடுத்து பாண்டிகுமார், சோனாஸ்ரீ, கருப்பாயி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கராஜ் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை மதிப்பிட்டாளர் மற்றும் நகை மறுமதிப்பீட்டாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து மொத்த வங்கியையும் ஏமாற்றிய சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications