நிலக்கோட்டை விஏஓவுக்கு நினைத்தே பார்க்காத இன்ப அதிர்ச்சி.. திண்டுக்கல்லில் நடந்த திருப்பம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 42 பவுன் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்ற இளைஞரை குற்றம் நடந்த வெறும் 3 நாட்களில் கண்டுபிடித்து கைது செய்ததுடன், நகைகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்பணி நிமித்தமாக . கடந்த 16-ஆம் தேதி முருகேசன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கும், அவரது மனைவி வள்ளிமயில் சொந்த வேலை காரணமாக திண்டுக்கல்லுக்கும் சென்றுவிட்டார்கள். இதையடுத்து விஏஓ முருகேசன் வீடு பூட்டிக்கிடந்துள்ளது.

Gold worth Rs 50 lakhs returned in Dindigul in 3 days An unexpected twist for Nilakottai VAO

கொள்ளை நடந்த விதம்

விஏஓ வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார். பீரோவை உடைத்து வைக்கப்பட்டிருந்த மோதிரம், தோடு, நெக்லஸ், சங்கிலி என மொத்தம் 42 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து உள்ளார். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய வள்ளிமயில், கதவு திறந்து கிடப்பதை கண்டார். உள்ளே பீரோவை உடைத்து நகைகள் திருடியிருக்கிறார்கள் என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் நடவடிக்கை

இதையடுத்து வள்ளிமயில் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை போலீசில் நடந்த சம்பவங்களை விவரித்து புகார் அளித்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசாரும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். குற்றவாளியைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியை அடையாளம் காண சுற்றி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து போலீசார் சேகரித்தனர்.

கொள்ளையன் சிக்கினார்

இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையின் போது, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். தொடர்ந்து அவரைத் தீவிரமாக விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் (வயது 24) என்பதும், அவர் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

நகைகள் மீட்பு

அவரிடமிருந்து 42 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன. கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இன்றைய சூழலில் 42 பவுன் தங்கம் வாங்க சுமார் 50 லட்சம் வரை செலவாகும். போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து விஏஓ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+