நிலக்கோட்டை விஏஓவுக்கு நினைத்தே பார்க்காத இன்ப அதிர்ச்சி.. திண்டுக்கல்லில் நடந்த திருப்பம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 42 பவுன் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்ற இளைஞரை குற்றம் நடந்த வெறும் 3 நாட்களில் கண்டுபிடித்து கைது செய்ததுடன், நகைகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்பணி நிமித்தமாக . கடந்த 16-ஆம் தேதி முருகேசன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கும், அவரது மனைவி வள்ளிமயில் சொந்த வேலை காரணமாக திண்டுக்கல்லுக்கும் சென்றுவிட்டார்கள். இதையடுத்து விஏஓ முருகேசன் வீடு பூட்டிக்கிடந்துள்ளது.

கொள்ளை நடந்த விதம்
விஏஓ வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார். பீரோவை உடைத்து வைக்கப்பட்டிருந்த மோதிரம், தோடு, நெக்லஸ், சங்கிலி என மொத்தம் 42 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து உள்ளார். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய வள்ளிமயில், கதவு திறந்து கிடப்பதை கண்டார். உள்ளே பீரோவை உடைத்து நகைகள் திருடியிருக்கிறார்கள் என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸ் நடவடிக்கை
இதையடுத்து வள்ளிமயில் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை போலீசில் நடந்த சம்பவங்களை விவரித்து புகார் அளித்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசாரும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். குற்றவாளியைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியை அடையாளம் காண சுற்றி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து போலீசார் சேகரித்தனர்.
கொள்ளையன் சிக்கினார்
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையின் போது, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். தொடர்ந்து அவரைத் தீவிரமாக விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் (வயது 24) என்பதும், அவர் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
நகைகள் மீட்பு
அவரிடமிருந்து 42 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன. கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இன்றைய சூழலில் 42 பவுன் தங்கம் வாங்க சுமார் 50 லட்சம் வரை செலவாகும். போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து விஏஓ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நன்றி கூறினார்கள்.
-
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications