அன்னதானத்துக்கு எதுக்கு அனுமதி வாங்கனுங்குறேன்..சேகர்பாபு ஆன்டி இந்து! பழனியில் கொந்தளித்த எச்.ராஜா!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நம்மை பிடித்த ஏழரை பாபு எனவும், அவர் ஒரு ஆன்டி இந்து எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வருகை தந்தார். பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் நகரத்தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் ஹெச்.ராஜாவிற்கு வரவேற்பு அளித்தனர்‌ .

h raja bjp

தொடர்ந்து எச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டியில் மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வகிறேன்.

பழனியில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருகிறது. திமுக கட்சி மாநாடு நடைபெறும் போது தொண்டர்களுக்கு அளிக்கும் உணவு குறித்து அனுமதி பெற்று தான் மாநாடு நடத்துகிறீர்களா.

நம்மை பிடித்த ஏழரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. அவர் இந்துவே கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு அல்லேலுயா என்று கோஷமிட்ட போதே அவரது பதவியை பறித்திருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் கிரிப்டோ கையில் மாட்டிக் கொண்டு சீரழிகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது ஒரு இந்துவின் கடமை என்கிற அடிப்படையில் யாரிடமும் அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவோம்.

திருப்பரங்குன்றம் மலையில் 50 சென்ட் நிலமானது வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று அறிவித்திருப்பது தவறு. 1931 ஆம் ஆண்டு ப்ரிவியூ கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டபடி திருப்பரங்குன்றம் கோவிலை முறையாக பாதுகாக்க வேண்டும். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. தமிழக ஹிந்து முஸ்லிம் மோதலை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சி என்பது மனிதநேயமே இல்லாத கட்சியாகும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஞானசேகருக்கு ஆதரவாக காவல்துறையை சேர்ந்த 6பேர் செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் காவல்துறையின் ஈரல் பகுதி அழுகிவிட்டது. தற்போது அவருடைய மகன் ஆட்சியில் முழுவதுமாக அழுகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+