திண்டுக்கல்லில் லாரி டிரைவருக்கு உடம்பு பூராம் மூளை.. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்'.. இதை பாருங்க
திண்டுக்கல்: எந்த ஒரு விஷயத்தை பிளான் பண்ணாமா பண்ணினால் இப்படிதான் நடக்கும் .. ரயில்வே சுரங்கப்பாதை தடுப்பு கம்பியில் போய்விடலாம் என்று ஆர்வத்துடன் சென்ற டிரைவருக்கு பாதி தடுப்பு கம்பியை கடந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது. வண்டியின் பின் பகுதி சற்று தூக்கியிருக்கிறது என்பது. வசமாக சிக்கிக்கொண்ட லாரியை மீட்க நீண்ட நேரம் யோசித்த டிரைவர் எப்படி மீட்டார் என்பதை பார்ப்போம்.
தலையே போகும் பெரிய பிரச்சனைகளுக்கு கூட பொறுமையாக யோசித்து பார்த்தால் மாற்று வழிகள் நிச்சயம் இருக்கும். தீர்க்கவே முடியவில்லை என்று இருந்த பல பிரச்சனைகளுக்கு மாற்றி யோசித்தால் நம்ப முடியாத வகையில் தீர்வுகள் வந்துள்ளன. ஒரு முறை, வீட்டின் படிக்கெட்டில் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. குழந்தையை வெளியே எடுக்க பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் குழந்தை உடலை வெளியே எடுக்க முடியவில்லை.. குழந்தையின் தாய் உடனே தீயணைப்பு அதிகாரிகளை அழைக்கிறார். தந்தையோ ரம்பத்தை எடுத்து அறுக்க ஓடி வருகிறார். குழந்தை உடனே சாமர்த்தியமாக யோசித்து, குழந்தை தலையைவிட்ட வழியாகவே வெளியே சென்றுவிட்டான்.

இதே போல் பல்லாவரத்தில் பல வருடமாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதற்கு தீர்வாக அங்குள்ள ஒரு வழி மேம்பாலத்தை, இருவழியாக மாற்றி வாகனங்களை செல்ல வைத்தார்கள். அதன்பிறகு போக்குவரத்து அங்கு கணிசமாக குறைந்துள்ளது. சின்னதாய் மாற்றி யோசித்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அப்படித்தான் திண்டுக்கல்லில் டிரைவர் மாற்றி யோசித்து வாகனத்தை மீட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் ஓட்டி வந்தார். திண்டுக்கல் நகரில் பழைய கரூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை கன்டெய்னர் லாரி கடக்க முயன்றது. அப்போது சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் அந்த லாரி சிக்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சமயோசிதமாக டிரைவர் யோசித்து செயல்பட்டு, லாரியின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி விட்டார். இதையடுத்து கன்டெய்னர் லாரி தடுப்பு கம்பியில் இருந்து விடுபட்டது. பின்னர் லாரியை பின்னோக்கி நகர்த்திய டிரைவர், சாலையோரத்தில் நிறுத்தினார். அதன்பிறகு டயர் பஞ்சர் கடை ஊழியர்கள் மூலம் டயர்களில் மீண்டும் காற்றை நிரப்பி அங்கிருந்து லாரியை டிரைவர் எடுத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக மாறியது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications