Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் லாரி டிரைவருக்கு உடம்பு பூராம் மூளை.. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்'.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: எந்த ஒரு விஷயத்தை பிளான் பண்ணாமா பண்ணினால் இப்படிதான் நடக்கும் .. ரயில்வே சுரங்கப்பாதை தடுப்பு கம்பியில் போய்விடலாம் என்று ஆர்வத்துடன் சென்ற டிரைவருக்கு பாதி தடுப்பு கம்பியை கடந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது. வண்டியின் பின் பகுதி சற்று தூக்கியிருக்கிறது என்பது. வசமாக சிக்கிக்கொண்ட லாரியை மீட்க நீண்ட நேரம் யோசித்த டிரைவர் எப்படி மீட்டார் என்பதை பார்ப்போம்.

தலையே போகும் பெரிய பிரச்சனைகளுக்கு கூட பொறுமையாக யோசித்து பார்த்தால் மாற்று வழிகள் நிச்சயம் இருக்கும். தீர்க்கவே முடியவில்லை என்று இருந்த பல பிரச்சனைகளுக்கு மாற்றி யோசித்தால் நம்ப முடியாத வகையில் தீர்வுகள் வந்துள்ளன. ஒரு முறை, வீட்டின் படிக்கெட்டில் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. குழந்தையை வெளியே எடுக்க பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் குழந்தை உடலை வெளியே எடுக்க முடியவில்லை.. குழந்தையின் தாய் உடனே தீயணைப்பு அதிகாரிகளை அழைக்கிறார். தந்தையோ ரம்பத்தை எடுத்து அறுக்க ஓடி வருகிறார். குழந்தை உடனே சாமர்த்தியமாக யோசித்து, குழந்தை தலையைவிட்ட வழியாகவே வெளியே சென்றுவிட்டான்.

dindigul lorry railway

இதே போல் பல்லாவரத்தில் பல வருடமாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதற்கு தீர்வாக அங்குள்ள ஒரு வழி மேம்பாலத்தை, இருவழியாக மாற்றி வாகனங்களை செல்ல வைத்தார்கள். அதன்பிறகு போக்குவரத்து அங்கு கணிசமாக குறைந்துள்ளது. சின்னதாய் மாற்றி யோசித்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அப்படித்தான் திண்டுக்கல்லில் டிரைவர் மாற்றி யோசித்து வாகனத்தை மீட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் ஓட்டி வந்தார். திண்டுக்கல் நகரில் பழைய கரூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை கன்டெய்னர் லாரி கடக்க முயன்றது. அப்போது சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் அந்த லாரி சிக்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சமயோசிதமாக டிரைவர் யோசித்து செயல்பட்டு, லாரியின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி விட்டார். இதையடுத்து கன்டெய்னர் லாரி தடுப்பு கம்பியில் இருந்து விடுபட்டது. பின்னர் லாரியை பின்னோக்கி நகர்த்திய டிரைவர், சாலையோரத்தில் நிறுத்தினார். அதன்பிறகு டயர் பஞ்சர் கடை ஊழியர்கள் மூலம் டயர்களில் மீண்டும் காற்றை நிரப்பி அங்கிருந்து லாரியை டிரைவர் எடுத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக மாறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+