போதையில் ‛டார்ச்சர்’.. கணவரின் அந்தரங்க உறுப்பில் தாக்கி கொன்ற மனைவி.. திண்டுக்கல் அருகே ஷாக்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருகே ‛டார்ச்சர்' செய்த கணவரின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கி மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவி போலீசில் அளித்த வாக்குமூலம் திடுக்கிட செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யன் (வயது 35). கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

இந்த தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். அதாவது 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே தான் வீரய்யனுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது அடிக்கடி மதுபானம் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனை அபிராமி கண்டித்துள்ளார். ஆனாலும் வீரய்யன் அதனை கண்டுக்கொள்ளாமல் தினமும் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவும் வீரய்யன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த வேளையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரய்யன், அபிராமி ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். வீரய்யன் ஆக்ரோஷமாக அபிராமியை தாக்கியதாக கூறப்படுகிறத. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி இரும்பு குழாயை எடுத்து வீரய்யனின் மர்மஉறுப்பில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைக்குலைந்துபோன வீரய்யன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துள்ளார். இதனால் பயந்துபோன அபிராமி அங்கிருந்து தலைமறைவானார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீரய்யனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த அவரது மனைவி அபிராமியை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தினமும் மதுபானம் குடித்து வந்து டார்ச்சர் செய்தார். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. தற்போதும் அந்த பிரச்சனையில் அவரை தாக்கியபோது இறந்தார் என தெரிவித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அபிராமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications