தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இருக்கட்டும்.. அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்!
Recommended Video

பழனி: பாலாற்றில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய ஒரு பதிலால் அதிமுக தொண்டர் அதிர்ச்சி அடைந்தார்.
அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தற்போது பேசி வருவதை பார்த்தால் இதற்குத்தான் இவர்களை ஜெயலலிதா பேசவிடாமலேயே வைத்திருந்தார் என்று எண்ணத் தோன்றுகிறது.
என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்கள்.

அதிர்ச்சி
அதிலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதெல்லாம் அதிமுக அரசுக்கு ஆப்பு வைப்பதை போன்றே உள்ளது. ஒரு விழாவில் பேசிய அமைச்சர், ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, உப்புமா சாப்பிடவில்லை, நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

பிரதமர் நரசிம்மராவ்
தம்பிதுரையை பற்றி ஒரு விழாவில் புகழ்ச்சியாக கூறி வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் இன்று கரூரில் இருப்பார், மதியம் வேறு ஊரில் இருப்பார் சாயந்திரம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசி கொண்டிருப்பார் என்றார். இதை கேட்ட மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஜெயலலிதா
சசிகலாவுக்கு கவுன்ட்டர் கொடுக்கிற பேர் வழி என்று நினைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர் ஜெயலலிதா என்று கூறினார். அதாவது சசிகலா என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்று உளறி விட்டார்.

பாசனத்துக்கு
தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாற்றில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

பணம் கொடுத்தார்கள்
அப்போது அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஓராயிரம் ரூபாய் கூட ஒதுக்கவில்லையே என கேட்டார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசனோ, அதான் ஓட்டு போடும் போது பணம் கொடுத்தார்களே என்றார். எனவே அதிமுக அரசை கவிழ்க்க வேறு யாரும் தேவையில்லை, இதுபோன்ற அமைச்சர்களே போதும்.
-
“ரீ-டேக் போலாமா?”.. சுற்றுலாவா? சுற்றுச்சூழலா? தனது துறை என்னவென்றே தெரியாமல் உளறிய தவெக அமைச்சர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications