திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம்- மக்கள் அச்சம்- காரணம் தெரியாமல் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் இன்று பிற்பகல் பலத்த வெடிசப்தம் கேட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மர்ம வெடிசப்தம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சரியான விளக்கம் தரப்படாததால் குழப்பமும் பீதியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது விமானங்கள் தாழ்வாக பறக்கும் பயங்கர இரைச்சல், திடீரென நிலநடுக்க அதிர்வுகளுக்கு இணையாக உறைய வைக்கும் வெடிசப்தம் கேட்பது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த வெடிசப்தம் புரியாத புதிராக இருந்து வருகிறது.

 Mysterious explosive sound- Public panic again in Dindigul District

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகளை அதிரவைக்கும் இந்த வெடிசப்தம் எதனால் ஏற்பாடுகிறது? என பலமுறை நாமும் கேள்வி எழுப்பி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வியும் எழுப்பி இருந்தார்.

பொதுவாக இத்தகைய வெடிசப்தங்கள் ஏற்பட்ட உடன், மாவட்ட நிர்வாகமானது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என ஒரு அறிக்கை கொடுப்பதுடன் நிறுத்திவிடும். ஆனால் எதனால் இத்தகைய வெடிசப்தங்கள் நிகழுகின்றன என்பதற்கான விடைதான் தெரியவில்லை.

கடந்த மார்ச் மாதமும் இதேபோல சப்தம் கேட்டது. இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம் அதிரவைத்தது. வீட்டின் ஜன்னல், கதவுகள் கடுமையாக அதிர்ந்தன. இத்தகைய வெடிசப்தம் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே பீதியை உருவாக்கி இருக்கிறது.

திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரெங்கமலை, கருமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக மத்திய புவியியல் துறையினர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஆய்வு எதற்காக நடத்தப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை. அப்பகுதிகளில் புவியியல் துறையினர் மார்க்கிங் கற்களை ஊன்றி இருப்பதும் எதற்காக என்பதும் தெரிவிக்கப்படவில்லை. மலைப்பகுதியில் நிலத்தடியில் கனிமவளம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்பதும் விளக்கப்படவில்லை.

மேலும் குஜிலியம்பாறை பகுதியில் கல்குவாரிகள் நீண்டகாலமாக செயல்படுகின்றன. அந்த கல்குவாரிகளில் வைக்கப்படுகிற வெடிகள்தான் இத்தனை சக்திவாய்ந்ததாக இருக்கிறதா? என்பதையும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் விமான நிலையம் இல்லை. ஆனால் இடைவிடாமல் விமானங்கள் தாழப்பறக்கும் பேரிரைச்சலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான விளக்க அறிக்கை கொடுத்து அச்சத்தைப் போக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+