திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம்- மக்கள் அச்சம்- காரணம் தெரியாமல் குழப்பம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் இன்று பிற்பகல் பலத்த வெடிசப்தம் கேட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மர்ம வெடிசப்தம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சரியான விளக்கம் தரப்படாததால் குழப்பமும் பீதியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது விமானங்கள் தாழ்வாக பறக்கும் பயங்கர இரைச்சல், திடீரென நிலநடுக்க அதிர்வுகளுக்கு இணையாக உறைய வைக்கும் வெடிசப்தம் கேட்பது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த வெடிசப்தம் புரியாத புதிராக இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகளை அதிரவைக்கும் இந்த வெடிசப்தம் எதனால் ஏற்பாடுகிறது? என பலமுறை நாமும் கேள்வி எழுப்பி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வியும் எழுப்பி இருந்தார்.
பொதுவாக இத்தகைய வெடிசப்தங்கள் ஏற்பட்ட உடன், மாவட்ட நிர்வாகமானது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என ஒரு அறிக்கை கொடுப்பதுடன் நிறுத்திவிடும். ஆனால் எதனால் இத்தகைய வெடிசப்தங்கள் நிகழுகின்றன என்பதற்கான விடைதான் தெரியவில்லை.
கடந்த மார்ச் மாதமும் இதேபோல சப்தம் கேட்டது. இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம் அதிரவைத்தது. வீட்டின் ஜன்னல், கதவுகள் கடுமையாக அதிர்ந்தன. இத்தகைய வெடிசப்தம் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே பீதியை உருவாக்கி இருக்கிறது.
திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரெங்கமலை, கருமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக மத்திய புவியியல் துறையினர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஆய்வு எதற்காக நடத்தப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை. அப்பகுதிகளில் புவியியல் துறையினர் மார்க்கிங் கற்களை ஊன்றி இருப்பதும் எதற்காக என்பதும் தெரிவிக்கப்படவில்லை. மலைப்பகுதியில் நிலத்தடியில் கனிமவளம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்பதும் விளக்கப்படவில்லை.
மேலும் குஜிலியம்பாறை பகுதியில் கல்குவாரிகள் நீண்டகாலமாக செயல்படுகின்றன. அந்த கல்குவாரிகளில் வைக்கப்படுகிற வெடிகள்தான் இத்தனை சக்திவாய்ந்ததாக இருக்கிறதா? என்பதையும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் விமான நிலையம் இல்லை. ஆனால் இடைவிடாமல் விமானங்கள் தாழப்பறக்கும் பேரிரைச்சலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான விளக்க அறிக்கை கொடுத்து அச்சத்தைப் போக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோள்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications