தமிழகத்தை உலுக்கியெடுத்து களைப்பான கஜா.. நாளை மாலை அரபிக்கடலை சென்றடையும்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சுழன்றடிக்கும் புயல் காற்று | வலு குறைந்த புயலாக மாறியது | உள்மாவட்டங்களில் பலத்த மழை- வீடியோ
திண்டுக்கல்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த அதி தீவிர கஜா புயல், தீவிர புயலாக வலு குறைந்து, காற்றழுத்தமாக மாறி கேரளாவில் கால் பதித்தது.
இன்று காலை 9.30 மணியளவில், தீவிர புயலாக இருந்த கஜா, திண்டுக்கல் மாவட்டத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்லில் நிலை கொண்டிருந்த புயல், படிப்படியாக முன்னேறி, கொடைக்கானல் வழியாக, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன்பிறகு, கேரளாவின் இடுக்கி மாவட்டம் வழியாக பயணித்த அரபிக்கடல், நாளை மாலை அரபிக் கடலை சென்றடைகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையாக மேலும் வலு குறைந்து, பயணித்தது. இதனால், திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications