பழனி போறவங்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் மீண்டும் தொடங்குது ரோப் கார் சேவை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் (ஆகஸ்ட் 20) ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஏராளமாான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டுப் பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவையைப் பயன்படுத்தி மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். வார இறுதி நாட்களிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் இக்கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும். மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
பண்டிகை நாட்கள்
கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் பலரும் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலைக் கோவில்
குறைந்த நேரத்திலும், எளிதிலும் சென்று வரலாம் என்பதால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த ரோப் கார் சேவை மூலமாக மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம். இந்த ரோப் கார் மூலமாக பயணிக்கும்போது இயற்கையின் அழகை ரசித்தவாறு செல்லலாம் என்பதால் பொதுமக்கள் பலரும் ரோப் கார் சேவையை விரும்புகின்றனர்.
ரோப் கார் சேவை
இந்த ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஜூலை 15 ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணி தற்போது முடிவடைந்துள்ளது.
மீண்டும் தொடக்கம்
இதைத்தொடர்ந்து, நாளை முதல் (ஆகஸ்ட் 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும், காலை 9 மணி முதல் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications