இயக்குநர் மோகன் ஜி மீது புதிய வழக்கு.. ஜாமீனில் வந்தாலும் விடாத பழனி போலீசார்.. பிரிவுகள் இதுதான்
திண்டுக்கல்: பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான கருத்துகளை கூறி அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜியை திருச்சி போலீசார் நேற்று கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன் தொடர்ச்சியாக மோகன் ஜி மீது பழனி தேவஸ்தானம் அளித்த புகாரில் பழனி போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமாக லட்டு தயாரிப்பு என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான ஆய்விலும் கூட பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் தான் திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் பஞ்சாமிர்தமும் விவாதப்பொருளாகி உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பிலும் கலப்படம் உள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். அதேவேளையில் தொடர்ந்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியது.
இதுதொடர்பாக மோகன் ஜி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்படுவதாக செவி வழி செய்தியாக நான் கேட்டு இருக்கிறேன்'' என்று கூறியிருந்தார். இது விவாதமான நிலையில் மோகன் ஜி மீது போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன.
திருச்சியை எடுத்து கொண்டால் சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை மேலாளர் கவியரசு என்பவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவில் நேற்று மோகன் ஜி சென்னை ராயபுரத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி நீதிமன்றத்தில் நேற்று மாலை இயக்குனர் மோகன் ஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே தான் மோகன் ஜி மீது பழனி தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பழனி கோவில் பஞ்சாமிர்தம் பற்றி தவறான கருத்துகளை கூறிய இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து மோகன் ஜி மீது 2 பிரிவுகள் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் என்று மொத்தம் 2 பிரிவுகளில் மோகன் ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக மோகன் ஜி-க்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பழனி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications