தக்காளி விலை தலைகீழ்.. பீட்ரூட் போட்டவங்க பிச்சை தான் எடுக்கனும்! அதள பாதாளத்தில் காய்கறி விலை! ஷாக்
திண்டுக்கல்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் காய்கறி விலை விண்ணை தொட்ட நிலையில் தற்போது பல காய்கறிகளின் விலை வெறும் 10 ரூபாய்க்குள் இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய், பீட்ரூட் ஆகியவற்றை பறித்து விற்றாலும், கூலிக்கு கூட கட்டாத நிலையில் இருப்பதால் அவற்றை குப்பையில் கொட்டுகின்றனர் விவசாயிகள். கடனை உடனை வாங்கி காய்கறி பயிரிட்டால் அது தங்களை பிச்சை எடுக்க வைத்து விடும் போல என புலம்புகின்றனர்..
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை மழை பெய்து வந்ததால், புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

வழக்கமாக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், அப்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வந்தது. மேலும் மழை, பனி என மாறி மாறி வந்ததால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி விட்டன. மேலும் பூச்சி தாக்குதலால் காய்கறி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அப்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி நூறு முதல் 110 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும் பீன்ஸ், பீட்ரூட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விளையும் கடுமையாக அதிகரித்தது. அப்போதைய சூழலில் ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும், அவரைக்காய் 120க்கும், தக்காளி 120 ரூபாய்க்கும், இஞ்சி 110 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 300 முதல் 400 ரூபாய் வரையும் விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது மழை பனிப் பொழிவு குறைந்து வெயில் அடித்து வருவதால் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால், காய்கறிகள் விலை அதல பாதாளத்தை நோக்கி சென்றுள்ளது. சில காய்கறிகள் வெறும் பத்து ரூபாய்க்குள்ளாகவே விற்பனையாகிறது. தற்போதைய சூழ்நிலை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி வெறும் 3 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கும், பீட்ரூட் 4 ரூபாய்க்கும், சுரக்காய் இரண்டு ரூபாய்க்கும், கத்தரிக்காய் 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல பல காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசி உள்ள விவசாயிகள்," தக்காளி விலை அதிகரிக்கும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என தமிழ்நாடு அரசு தக்காளியை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. இந்த நிலையில் வீழ்ச்சியாக இருக்கும் போது அது போன்று செய்வதில்லை. எனவே காய்கறிகளுக்கு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விலை அதிகரிக்கும் போது கூட சில விவசாயிகள் மட்டுமே பயன் பெறுகிறார்கள். ஆனால் விலை வீழ்ச்சியானால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவை அதிகபட்சம் இரண்டு மூன்று நாளைக்கு மேல் தாங்காது. எனவே, அவற்றை பாதுகாத்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சமாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையாவது ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications