திண்டுக்கல்லில் பிரபல பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டல்.. தமமுக நிர்வாகிகள் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பால் நிறுவன ஊழியர்களிடம் மாநாட்டிற்கு 5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டிய புகாரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து ரத்தினவேல், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கல்பட்டியை சேர்ந்த முனிச்செல்வம் மற்றும் சிலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தும் போது, நன்கொடைகள் கேட்பது வழக்கம். அந்த வகையில் நன்கொடைகள் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. ஆனால் சிலர் மிரட்டி பணம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி ஒரு புகார்தான் திண்டுக்கல்லில் வந்துள்ளது.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மோர் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ரஞ்சித் யாதவ் (37) திட்ட மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு நன்கொடை கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து ரத்தினவேல், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கல்பட்டியை சேர்ந்த முனிச்செல்வம் மற்றும் சிலர் பால் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களை வாட்ச்மேன் சத்தியநாராயணன் என்பவர் தடுத்தும், அத்துமீறி பால் நிறுவனத்திற்குள் நுழைந்து மாநாடு நடத்துவதற்கு பணம் 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுங்கள் என்று ரஞ்சித் யாதவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் இப்போது எங்களால் பணம் தர முடியாது, அலுவலக மேலிடத்தில் கேட்டு சொல்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாங்கள் கேட்கும் போது பணம் தரவில்லை என்றால் உங்கள் பால் நிறுவனத்தை நடத்த விட மாட்டோம் என்று அசிங்கமாக பேசி மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சித் யாதவ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முத்துரத்தினவேல், முனிச்செல்வம் உள்ளிட்ட 10 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications