சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம்! அமைச்சரிடம் கேட்ட முத்துலட்சுமி! விஜய்யை இப்படியா பேசுவது?
திண்டுக்கல்: சந்தனக் கடத்தல் வீரப்பனை அடக்கம் செய்த இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், வீரப்பனின் மனைவியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க, அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார்.

அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, "இப்போதும் கூட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் ஸ்டாலின், வன்னிய சமுதாயத்தினருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தி வருகிறார். உங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் முத்துலட்சுமி மேலும் பேசுகையில், "இன்று பலர் தமிழகத்தை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகைகளைக் கட்டிப்பிடித்து ஆடி, பணம் சம்பாதித்துவிட்டு இன்று நான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என மார்தட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமிழகத்திற்கு வடமாநிலத்தவர்கள் அதிகம் வந்து தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருகிறார்கள். இதனால் தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்லும் நிலை உருவாகி வருகிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் எப்படித் தமிழர்களை அழித்து சிங்களர்கள் ஆட்சி செய்கிறார்களோ, அதுபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழித்து தமிழகத்தில் ஆட்சி செய்ய நினைக்கிறது" என்றார்.
நடிகர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல், மிகவும் அவதூறாகப் பேசியது த.வா.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் த.வா.க.வின் கல்வி விருது வழங்கும் விழாவில், வெறும் 2 கிராம் தங்கத்திற்காக தங்கள் பெண் பிள்ளைகளை நடிகர்களைக் கட்டிப்பிடிக்கச் செய்கிறார்கள் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கொச்சையாகப் பேசியிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications