சீக்கிரம் வாங்க.. 108க்கு போன அவசர கால்.. சர்ரென போய் பார்த்த நர்ஸுகளுக்கு.. காத்திருந்த அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு சென்ற போன் கால் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவை அவசர காலத்திற்கு உதவும் மருத்துவ சேவை ஆகும். பல லட்சம் பேரின் உயிரை காப்பாற்றியதில் 108 ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்காற்றி இருக்கிறது.

108 ஆம்புலன்ஸ் சேவை முக்கியமாக இரவு நேரங்களில் மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளது.

 ஆம்புலன்ஸ் சேவை

ஆம்புலன்ஸ் சேவை

முக்கியமாக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள், இரவு நேரங்களில் ஏற்படும் அவசர மருத்துவ தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ்தான் உதவியாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு சென்ற போன் கால் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வேடசந்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சாலை சந்திப்பு ஒன்றில் இருந்த புல்வெளி ஒன்றில் இளைஞர் படுத்தபடி கிடந்துள்ளார்.

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலை


இவரின் நெற்றியில் லேசாக காயம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கே உடனே கூடினார்கள். பெரும்பாலும் இவர் பஸ்ஸில் தொங்கியபடி சென்று இருக்கலாம் என்று யூகித்தனர். பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று யூகித்தனர். இல்லையென்றால் இரவு நேரத்தில் ஏதாவது வாகனம் மோதி அவர் விழுந்து இருக்கலாம் என்று யூகித்தனர். அவரை எழுப்ப முயன்றும் எழுப்ப முடியவில்லை.

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இரண்டு நர்ஸ்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கே வந்து, கீழே கிடந்த நபரின் முகத்தில் தண்ணீர் ஊற்றி அவரை எழுப்பிவிட்டனர். அவர் லேசாக மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தார். அவரிடம்.. உங்களை எதுவும் வண்டி மோதியதா என்று நர்ஸ்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் பதில் சொல்லாமல் உளறலாக பேசி உள்ளார். அவர் பதில் சொல்லாமல் உளறலாக பேசி உள்ளார்.

குடி பழக்கம்

குடி பழக்கம்


இதன் பின்னரே அவர் குடித்து இருந்தது தெரிய வந்தது. முழு போதையில் அவர் குடித்துவிட்டு அங்கு படுத்து கிடந்துள்ளார். நினைவு போகும் அளவிற்கு அவர் படுத்துக்கிடந்த காரணத்தால் மக்கள் அவர் விபத்தில் இருக்கலாம் என்று எண்ணி உள்ளனர். முக்கியமாக அவரின் நெற்றியில் ஏற்பட்டு இருந்த காயம் காரணமாக அவர் விபத்தில் விழுந்து இருக்கலாம் என்று எண்ணி உள்ளனர். அந்த நபருக்கு கடைசியாக நர்ஸ்கள் தண்ணீர் கொடுத்து, விசாரித்து அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+