தீபாவளி: 2 நாட்களில் எத்தனை கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை தெரியுமா? 'தண்ணி'யிலேயே மிதந்த ஏரியா எது?
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்றும் அதற்கு முந்தைய நாளும் மட்டும் ரூ467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை கனஜோராக நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளி நாளிலும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மொத்தம் ரூ467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
தீபாவளிக்கு முந்தைய நாளில் (நவம்பர் 11) தமிழ்நாட்டில் அதிக மது விற்பனை நடைபெற்ற மண்டலங்கள் விவரம்:
மதுரை மண்டலம் : ரூ 52.73 கோடி
சென்னை மண்டலம்: ரூ48.12 கோடி
கோவை மண்டலம் : ரூ40.20 கோடி
திருச்சி மண்டலம்: ரூ40.02 கோடி
சேலம் மண்டலம் :ரூ.39.78 கோடி
நவம்பர் 11-ந் தேதியன்று தமிழ்நாட்டில் மொத்தம் ரூ221 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
தீபாவளி நாளில் (நவம்பர் 12) தமிழ்நாட்டில் அதிக மது விற்பனை நடைபெற்ற மண்டலங்கள் விவரம்:
திருச்சி மண்டலம்: ரூ55.60 கோடி
சென்னை மண்டலம்: ரூ52.98 கோடி
மதுரை மண்டலம் : ரூ 51.97 கோடி
சேலம் மண்டலம் :ரூ.46.62 கோடி
கோவை மண்டலம் : ரூ39.61 கோடி
நவம்பர் 12-ந் தேதியன்று தமிழ்நாட்டில் மொத்தம் ரூ246 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications