துபாய் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் பலி
துபாய்: துபாய் Deira Burj Murar பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துபாய் Deira Burj Murar அல் ராஸ் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் காதர், ஷலையாகுந்த் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கேரளாவை சேர்ந்த மலப்புரம் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி ஆகியோரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications