நபிகளாரின் மகள் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்.. துபாயில் தமிழில் ஓதப்பட்டது
துபாய்: நபிகளாரின் மகளான பாத்திமா நாயகியாரின் நினைவு நாளையொட்டி, பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் ஓதும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக துபாயில் நடைபெற்றது.
துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில், அஷ்ஷைகு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனிய்யுல் ஹூசைனிய்யுல் ஹாஷிமி நாயகம் அவர்களின் அறிவுறுத்தல் வழிகாட்டிதல் படி, அஸ்ஸய்யிது ஜமாலிய்யா சையது கலீல்அவுன் மவுலானா நாயகம் கத்தஸல்லாஹூ சிர்ருஹூல் அஜீஜ் அவர்கள் உருவாக்கிய, 300க்கும் மேற்பட்ட கண்ணிகள் கொண்ட பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் அன்னையின் நினைவு நாளில் மிகவும் விமரிசையாக துபாயில் நடைபெற்றது.

அமீரக துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜமா அத்தர்கள், சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், பரிசுத்த நாயகியாரின் வாழ்வியலை முழுமையாக தெளிவுபடுத்தும் வகையில், அவருடைய வாழ்வியல் குறித்து தமிழில் பக்தியுடன் மாலை ஓதினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கலிபா முனைவர் ஸஹாப்தீன் தலைமை வகித்து, வரேவற்றார். ஸெய்யித் அலி மௌலானா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து இந்த புனித மாதத்தை முன்னிட்டு தராவிஹ் தொழுகை மற்றும் பயான் நிகழ்வுக்காக வருகை தந்த மௌலவி ஹஜ்ரத் முஹம்மது அபுபக்கர் பைஜி உலவி சொற்பொழிவாற்றினார்.

முஹம்மது இக்பால் பேசுகையில், சூரத்துல் ஹவ்ஸரில், கவ்ஸர் என்பது என்ன, பாத்திமா நாயகியார் மூலம் நபி பெருமானார் சல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை கியாமத் வரை தொடரும் என்றும், நபி அவர்களை மனம் நோக செய்த மக்கள் அபத்தர்களாக இறைவன் ஆக்கிவிட்டான் என்பது குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர், இஃப்தார் விருந்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத், யுஏஇ பிரிவு, கோட்டைப்பள்ளி மௌலித் கமிட்டி, துபாய், ஜனாப் ஜமால் மைதீன், பொதுச் செயலாளர், ஜமால் முஹம்மது காலேஜ் முன்னாள் மாணவர் சங்கம், ஜனாப் பரக்கத் அலி உதவிச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, இரவி முத்து, தலைவர், அமீரக செந்தமிழர் பாசறை, தமிழகத்தில் இருந்து வருகை தந்த இயூமு லீக் மாநில ஆலோசகர் எம்ஜே அப்துல் ரவூப் மற்றும் அமீரகத்தின் பல பகுதிகளை சார்ந்த சபையினர், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத்களை சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications