Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த ஒரு ரியாக்சன் போதும்".. மேட்சுக்கு இடையே கோலி நடந்த விதம்.. நொறுங்கிய ஃபேன்ஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

துபாய்: நேற்று ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் கோலி நடந்து கொண்ட விதம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

2022 ஆசிய கோப்பை தொடரில் நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வென்றது. நேற்று நடந்த ஹாங்காங் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192-2 ரன்களை எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய ஹாங்காங் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே ஆடியது. அதிலும் ஹாங்காங் டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாகவே பேட்டிங் செய்தனர். சேசஷன் அலி, பாபர் ஹயாத் ஆகியோர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் 152-5 ரன்கள் வரை ஹாங்காங் அணி எடுத்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நேற்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணம் கோலி மற்றும் சூர்யா குமார் யாதவ் இருவரும்தான். சிறப்பாக ஆடிய கோலி நேற்று 44 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடக்கம். 1 பவுண்டரி அடக்கம். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கிய கோலி பின்னர் பேட்டிங் வேகத்தை கூட்டினார். 134.09 ஸ்டிரைக் ரேட்டில் கோலி ஆடியது அணிக்கு உதவியாக இருந்தது. இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவ் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பேட்டிங் செய்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

அதிலும் கடைசி ஓவரில் மட்டும் இவர் 4 சிக்ஸர் அடித்தார். முதல் 3 பந்துகள் அடுத்தடுத்து ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார். 26 பந்துகளில் இவர் நேற்று 68 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 6 சிக்ஸ், 6 பவுண்டரிகளை இந்த ஆட்டத்தில் ஆடினார். அதிலும் வைட்டாக ஆப் சைடில் வந்த முதல் இரண்டு பந்துகளை இவர் நகர்ந்து போய் "சீவிய" விதமும், அது சிக்ஸ் பறந்ததும் மைதானத்தில் இருந்தவர்களை வியக்க வைத்தது. கோலியே வியந்தபடி சூர்யா குமார் யாதவை பார்த்தார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியின் பேட்டிங் முடிந்ததும் கோலி முன் கூட்டியே நடந்து சென்று பின்னால் வந்த சூர்யா குமார் யாதவிற்காக காத்து இருந்தார். சூர்யா குமார் யாதவ் வந்ததும் அவரை பார்த்து குனிந்து, நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினார். அவரின் இந்த செயல் பலரையும் வியக்க வைத்தது. அட கோலியா இது என்று பலரும் வியந்து பார்த்தனர். அவரின் பேன்ஸ் கூட கோலி ரொம்ப மாறிவிட்டார் என்று இணையத்தில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

ஐபிஎல்

ஐபிஎல்

முன்னதாக 2020 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் - மும்பை அணிக்கு இடையிலான ஆட்டத்தில் கோலிக்கும் இளம் வீரர் சூர்ய குமார் யாதவிற்கு இடையே நடந்த மோதல் பெரிய அளவில் வைரலானது. அந்த போட்டியில் சேஸிங்கின் போது கோலி சிறுபிள்ளை போல அடிக்கடி சூர்ய குமார் யாதவை சீண்டினார். 10 ஓவர் முடியும் முன்பே கோலியின் சீண்டல் தொடங்கிவிட்டது. சூர்ய குமார் அடிக்கும் பந்துகளை தடுக்கும் போதெல்லாம் கோலி பந்தை சூர்ய குமார் மீது வீசுவது போல செய்து காட்டினார்.

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

பல முறை சூர்ய குமார் யாதவை கோலி கடுமையாக முறைத்தார். அதோடு இன்னொரு பக்கம் சாஹல், மோரிஸ் போன்ற வீரர்களும் சூர்ய குமார் யாதவை முறைத்தனர். கோலி சொல்லி செய்தது போல.. அவரை மட்டும் தனியாக குறி வைத்தனர். அப்படி அன்று நடந்து கொண்ட கோலிதான் நேற்று சூர்யா குமார் சிக்ஸ் அடித்ததும் அவரின் ஹெல்மெட்டில் தட்டி அவரை பாராட்டினார். அதோடு மேட்ச்சிற்கு பின்பாக அவரை குனிந்து வணங்கினார். நேற்று கோலி மைதானத்தில் இப்படி நடந்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+