துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!
துபாய்: அமெரிக்கா-ஈரான் போர் தற்போது 4வது வாரத்தை எட்டியிருக்கிறது. இப்படி இருக்கையில், ஈரானின் மின் கட்டமைப்புகளை நோக்கி தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், அமெரிக்கா எங்களை தாக்கினால்.. எங்களின் தாக்குதல் துபாய் உட்பட மொத்த வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று வார்னிங் கொடுத்திருக்கிறது.
அமெரிக்கா டாலருக்கு எதிராக, ஈரான் மேற்கொண்டு வந்த மாற்று நடவடிக்கைதான் இந்த போருக்கு காரணம். போரில் அமெரிக்காவுக்கு சவுதி, அமீரகம், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. எனவேதான் இந்த நாடுகளை குறி வைத்து ஈரான் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் வார்னிங்
இப்படி இருக்கையில், ஈரானின் மின் நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரினையை எப்படியாவது திறக்க வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு இருக்கும் நெருக்கடி. இதன் காரணமாகதான் மின் நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளார்.
வார்னிங் கொடுத்த டிரம்ப்
"ஈரான், நீரிணையை உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இந்த தாக்குதல் தொடரும்" என்று டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
நீரிணை மூடப்பட்டதால், அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. வேலியில் போன ஓணானை பிடித்து, வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, எரிபொருள் விலை உயர்வு டிரம்ப், சர்வதேச அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
ஈரானின் எச்சரிக்கை
எனவேதான் இந்த எச்சரிக்கை. ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? எங்களின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், பதிலுக்கு உங்களின் நட்பு நாடுகளான சவுதி, அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகியவற்றின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்குவோம் என்று வார்னிங் கொடுத்திருக்கிறது. மேலே லிஸ்ட் போட்ட நாடுகள் எல்லாம் பாலைவன நாடுகளாகும்.
எனவே குடிநீருக்கு 70-90% வரை கடல் நீரைதான் நம்பியிருக்கின்றன. இந்த கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் துபாய் உட்பட பல நகரங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
குடிநீர் பஞ்சம்
எனவே மொத்த வளைகுடாவும் தற்போது பதற்றத்தில் சிக்கியிருக்கிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை போல, குடிநீர் விலையையும் டிரம்ப் உயர்த்தாமல் இருந்தால் சரி என்று வளைகுடா மக்கள் கூறுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் குடிநீர் விலை நிலவரம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.35-55 வரை விற்கப்படுகிறது
- சவுதி அரேபியாவில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.45-65 வரை விற்கப்படுகிறது
- குவைத்தில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.29-43 வரை விற்கப்படுகிறது
விலை உயரும் அபாயம்
நம்மூரில் பெட்ரோல் டீசலுக்கு மானியம் கொடுப்பதை போல, அந்த நாடுகளில் அரசு குடிநீருக்கு மானியம் கொடுக்கிறது. எனவேதான் விலை கொஞ்சம் கம்மியாக இருக்கிறது. ஆனால், ஈரான் தாக்குதல் நடத்தினால் இதன் விலை உடனடியாக 5-10 மடங்கு அதிகரித்துவிடும். அதாவது 1.5 லிட்டர் குடிநீர் ரூ.420 வரை விற்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி -
ஹார்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு அளிக்க தயார்.. ஒன்று கூடிய 20 நாடுகள்! ஈரானுக்கு எகிறும் பிரஷர் -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்த ஈரான்! வழிக்கு வந்த அமெரிக்கா -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!















Click it and Unblock the Notifications